அல்லுவை மறைமுகமாக தாக்கிய பவர் ஸ்டார்.. சந்தோஷம் சோகமாக மாறக்கூடாது என்றும் கருத்து!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அல்லுவை மறைமுகமாக தாக்கிய பவர் ஸ்டார்.. சந்தோஷம் சோகமாக மாறக்கூடாது என்றும் கருத்து!

அல்லுவை மறைமுகமாக தாக்கிய பவர் ஸ்டார்.. சந்தோஷம் சோகமாக மாறக்கூடாது என்றும் கருத்து!

Malavica Natarajan HT Tamil
Jan 06, 2025 10:53 AM IST

சினிமா நிகழ்ச்சிக்கு நான் வரும்போது ரசிகர்களுக்கு சின்ன காயம் ஆனாலும் எனக்கு வலிக்கும். சந்தோஷம் துக்கமா மாறக் கூடாதுன்னு சினிமா நிகழ்ச்சிக்களுக்கு நான் அதிகம் போவதில்லை என பவண் கல்யான் பேசியுள்ளார்.

அல்லுவை மறைமுகமாக தாக்கிய பவர் ஸ்டார்.. சந்தோஷம் சோகமாக மாறக்கூடாது என்றும் கருத்து!
அல்லுவை மறைமுகமாக தாக்கிய பவர் ஸ்டார்.. சந்தோஷம் சோகமாக மாறக்கூடாது என்றும் கருத்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்றது. இதில், நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவர் ஸ்டார் பவண் கல்யாண் கலந்து கொண்டார்.

பிளாக்ல டிக்கெட் வாங்கினேன்

அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், "நான் ரொம்ப கம்மியாத்தான் தியேட்டருக்கு போய் சினிமா பார்ப்பேன். ஷங்கர் எடுத்த ஜென்டில்மேன் படத்தை சென்னையில பிளாக்கில டிக்கெட் வாங்கி தியேட்டர்ல பார்த்தேன். அப்போ எனக்கு நான் நடிகர் ஆவேன்னு கூட தெரியாது.

ஷங்கர் எடுத்த பிரேமிகுடு படத்தைப் பார்க்க யாரும் கூட வரலைன்னா, எங்க பாட்டியோட சேர்ந்து படம் பார்த்தேன். எல்லா வயசுலயும் இருக்கறவங்களுக்குப் பிடிக்கிற மாதிரி சினிமா எடுப்பாரு ஷங்கர். பொழுதுபோக்கு கூடவே அவரு படங்கள்ல ஒரு நல்ல சமூக செய்தியும் இருக்கும்.

ஷங்கர் படத்தை கொண்டாடினாங்க

தெலுங்கு சினிமாவோட பேரை உலகத்துலயே எடுத்துச் சொன்ன இயக்குநர்கள்ல ஷங்கரும் ஒருத்தர். இந்திய சினிமா துறை முழுக்க டோலிவுட் பக்கம் திரும்பிப் பார்க்க வச்சதுல ஷங்கருக்கு ஒரு பங்கு இருக்கு. ஷங்கரோட தமிழ் டப்பிங் படங்களை தெலுங்கு படங்கள் மாதிரியே மனசுல வெச்சு டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடினாங்க. நேரடியா ஷங்கர் ஒரு தெலுங்கு படம் பண்ணா நல்லா இருக்கும்னு நான் எப்பவும் நினைப்பேன். கேம் சேஞ்சர் படத்தைப் பண்றதுல எனக்கு சந்தோஷம்.

பெயர் இருக்கு.. ஆனா காசு இல்ல

தில் ராஜு என்கூட வக்கீல் சாப் படம் பண்ணாரு. வக்கீல் சாப் படம் பண்ணும்போது நான் ரொம்ப கஷ்டத்துல இருந்தேன். எனக்குப் பெயர் இருந்துச்சு. ஆனா என் கிட்ட காசு இல்ல. மார்க்கெட் இருக்குமா இல்லையான்னுகூட தெரியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில என்கூட சினிமா பண்ணாரு. வக்கீல் சாப் படம் இன்னைக்கு ஜனசேனா கட்சியை நடத்த உதவுது.

ராம் சரண் எனக்குத் தம்பி

ராம் சரண் பொறக்கும்போது எங்க வீட்டு தெய்வம் ஹனுமார் பேர் வர்ற மாதிரி அப்பா அவனுக்கு சரண்ன்னு பேர் வெச்சாரு. சிரஞ்சீவி எனக்கு அப்பா மாதிரி. சரணை நான் தம்பி மாதிரி நினைப்பேன். சின்ன வயசுல சரணை நிறைய அழ வச்சிருப்பேன். ராம் சரண் ரொம்ப டீசன்ட்டா வளர்ந்தாரு. சரண் நல்ல டான்சர். ஆனா எங்க முன்னாடி டான்ஸ் பண்றதை நாங்க எப்போவும் பார்த்ததில்ல. அவர்கிட்ட இவ்வளவு திறமை இருக்குன்னு நாங்க நினைச்சுப் பார்க்கவே இல்ல.

சிறந்த நடிகர் விருது

ரங்கஸ்தலம் படத்துல சரண் நடிப்பைப் பார்த்துட்டு, சிறந்த நடிகர் விருது அவருக்குக் கிடைக்கணும்னு மனசார வேண்டிக்கிட்டேன். அருமையா நடிச்சிருந்தாரு. இனிமேல் நிச்சயம் சிறந்த நடிகர் விருது கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு. சிரஞ்சீவிக்குத் தகுதியான வாரிசு சரண். அப்பா மெகாஸ்டார்னா, பையன் குளோபல் ஸ்டார் ஆவாரு.

கஷ்டத்த பாத்து வளந்த பையன்

சிரஞ்சீவி தனியா வளர்ந்து எங்களுக்கெல்லாம் ஆதரவா, அரவணைப்பா இருந்தாரு. இன்னைக்கு நான் எங்கெங்கேயோ போறதுக்கு சிரஞ்சீவி கொடுத்த ஆதரவுதான் காரணம். சிரஞ்சீவி எங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டாரு. ஷூட்டிங்ல சிரஞ்சீவி நிறைய தடவை காயம் பட்டுருக்காரு. அவர் கஷ்டத்தைப் பார்த்து எனக்குக் குற்ற உணர்ச்சியா இருக்கும். சில சமயங்கள்ல ஷூட்டிங்ல இருந்து வந்த அண்ணன் ஷூஸைக் கழட்டும்போது, கால் வீங்கிப் போயிருக்கும். அப்பா பட்ட கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தாரு சரண்.

எல்லாரும் நல்லா இருக்கணும்

ஒரு ஹீரோவை வெறுக்கணும்னு எங்க அண்ணன் எங்களுக்கு எப்போவும் சொல்லவே இல்ல. இந்த ஹீரோ படம் போகணும்னு எங்க வீட்ல அந்த மாதிரி கலாச்சாரம் கிடையாது. எல்லாரும் நல்லா இருக்கணும்னு நாங்க நினைப்போம். நாங்க நல்லா இருக்கணும், அவங்க நல்லா இருக்கக்கூடாதுன்னு நாங்க எப்போவும் நினைக்க மாட்டோம். ராம் சரணும் அந்த மாதிரி சூழ்நிலையிலதான் வளர்ந்தாரு.

சினிமா பட்ஜெட் ரொம்ப அதிகமாகிடுச்சு. கேம் சேஞ்சர் படத்தை மூணு வருஷம் எடுத்தாங்க. இந்தப் படத்தை ஊக்குவிக்க விருந்தினரா வந்திருக்கேன். ஆனா ரசிகர்களுக்கு ஒரு சின்ன காயம் பட்டாலும் எனக்கு ரொம்ப வலிக்கும். அதனாலதான் சினிமா நிகழ்ச்சிகளுக்குப் போக தயங்குவேன். சந்தோஷம் எப்போவும் துக்கமா மாறக்கூடாது. ஹீரோவைப் பார்க்கறதைவிட எல்லாரும் நல்லா இருக்கறதுதான் எனக்கு முக்கியம்.

நாங்க அவ்வளவு தாழ்ந்து போகல

சினிமா எடுக்குறவங்கதான் சினிமா துறை பத்தி பேசணும். சினிமா எடுக்காம அரசியல் பண்றவங்க சினிமா துறை பத்தி பேசக்கூடாது. சினிமா டிக்கெட்டுக்காக ஹீரோக்கள் வர வேண்டிய அவசியம் இல்ல. தயாரிப்பாளர்கள் வந்தா நாங்க கொடுத்துடுவோம். ஹீரோக்கள் வந்து வணக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. நாங்க அவ்வளவு தாழ்ந்தவங்க இல்லை"ன்னு பேசினார்.

இவர் கடைசியாக பேசிய வார்த்தைகள் அல்லு அர்ஜூனின் சமீபத்திய விவகாரங்கள் குறித்து இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.