Parvathy: என் கழுத்தில் காம விளையாட்டை ஆரம்பித்த இயக்குநர் - நடிகை ஸ்ரீலேகா; ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பேசிய பார்வதி
Parvathy: என் கழுத்தில் காம விளையாட்டை ஆரம்பித்த இயக்குநர் என நடிகை ஸ்ரீலேகா; ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பேசிய பார்வதி திருவோத்து பற்றியும் செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Parvathy: மலையாளத் திரையுலகில் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சுரண்டல் குறித்து பல தகவல்களை சொன்ன ஹேமா கமிட்டி அறிக்கையை "வரலாற்று தருணம்" என்று நடிகை பார்வதி திருவோத்து கூறுகிறார். அதேபோல், நடிகை ஸ்ரீலேகா மித்ராவும் தனக்கு நடந்த துன்பத்தைக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஏ.எஃப்.பி செய்திமுகமையிடம் பேசிய நடிகை திருவோத்து, ஹேமா கமிட்டி பற்றி அறிக்கைக்குப்பின் நடிகர்கள் செய்த பாலியல் தொல்லைகள் குறித்து நடிகைகள் பேசிவருவது, மீ டூவை விட இரண்டு மடங்கு அதிகம் என விவரித்தார்.
இந்த ஹேமா கமிட்டியை முன்னின்று நடத்திய வுமன் இன் சினிமா கலெக்டிவ் (டபிள்யூ.சி.சி) பரப்புரைக் குழுவின் உறுப்பினரான பார்வதி திருவோத்து, "தொழில்துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களை வேலைக்கு அமர்த்தும் ஆண்களால் ஒரு வாய்ப்பைப் பெற்றதற்காக, அவரது பாலில் தொல்லைகளை எல்லாம் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலை இருந்தது.
