Parthiban On TVK: ‘ இது விஜய்க்கு அவசியமில்லாத ஒன்று.. அந்த சந்தேகம் அவர் மீதும் இருக்கு’ -பார்த்திபன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Parthiban On Tvk: ‘ இது விஜய்க்கு அவசியமில்லாத ஒன்று.. அந்த சந்தேகம் அவர் மீதும் இருக்கு’ -பார்த்திபன்

Parthiban On TVK: ‘ இது விஜய்க்கு அவசியமில்லாத ஒன்று.. அந்த சந்தேகம் அவர் மீதும் இருக்கு’ -பார்த்திபன்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 25, 2025 10:48 AM IST

Parthiban On TVK: இது உண்மையில் அவருக்கு அவசியம் இல்லாத ஒன்று; ஆனால், அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலில் நுழைந்திருக்கிறார். ஒருவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் களம் கண்டிருக்கும் பொழுது ஆரம்பத்திலேயே அவரை தடுப்பது என்பது சரியில்லாத ஒன்று. -பார்த்திபன்

Parthiban On TVK: ‘ இது விஜய்க்கு அவசியமில்லாத ஒன்று.. அந்த சந்தேகம் அவர் மீதும் இருக்கு’  -பார்த்திபன்
Parthiban On TVK: ‘ இது விஜய்க்கு அவசியமில்லாத ஒன்று.. அந்த சந்தேகம் அவர் மீதும் இருக்கு’ -பார்த்திபன்

சாத்தூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ‘ நான் எல்லாவற்றையுமே கொஞ்சம் பாசிட்டிவாக பார்க்கக்கூடிய ஆள். இன்றைய காலக்கட்டத்தில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார். அவருடைய படமானது கோடிக்கணக்கில் வசூல் செய்கிறது. அப்படி இருக்கும் பொழுது, ஒருவர் அவ்ளோ பெரிய தொகையை, அப்படிப்பட்ட சிம்மாசனத்தை வேண்டாம் என்று கூறி அரசியலுக்கு வருகிறார்.

அவசியம் இல்லாத ஒன்று

இது உண்மையில் அவருக்கு அவசியம் இல்லாத ஒன்று; ஆனால், அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசியலில் நுழைந்திருக்கிறார். ஒருவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் களம் கண்டிருக்கும் பொழுது ஆரம்பத்திலேயே அவரை தடுப்பது என்பது சரியில்லாத ஒன்று.

விஜய்
விஜய்

ஆட்சிக்கு வரக்கூடாது

அதனால் அவருக்கு ஆதரவு கொடுத்து அவரை நாம் வரவேற்க வேண்டும்; இங்கு இவர்தான் ஆட்சி செய்ய வேண்டும், இவர் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற கட்டாயமெல்லாம் கிடையாது. இது ஜனநாயக நாடு, யார் வேண்டுமென்றாலும் ஆட்சிக்கு வரலாம்; இதற்கு முன்னதாக அரசியல் களம் கண்ட நடிகர்கள் சற்று பின்வாங்கி இருக்கிறார்கள். அதனால் அந்த சந்தேகம் விஜய் மீதும் இருக்கிறது. ஆனாலும் அவர் வந்து இருக்கிறார் அவரை ஆதரித்து நாம் வரவேற்க வேண்டும்’ என்று பேசினார்.

முன்னதாக வேங்கை வயல் விவகாரம் குறித்து பேசிய அவர், ‘வேங்கைவயல் விவகாரத்தில் ஏன் இவ்வளவு காலதாமதம் ஆகிறது. இரண்டு பேர் குற்றவாளிகள் என்று பதிவு செய்யப்பட்ட போதும், நீதி வழங்க எதற்கு இவ்வளவு காலம் பிடிக்கிறது.

நான் நிறைய விஷயங்களுக்காக காவல்துறையை அணுகியிருக்கிறேன். அப்போது எனக்கு தெரியவந்தது என்னவென்றால், அவர்களுக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள் இருக்கின்றன. ஏதாவது ஒரு சின்ன விஷயத்தில் கவனம் செலுத்தும் பொழுது, அதற்கு முன்னதாக அவர்கள் கவனம் செலுத்திய பெரிய விஷயம் பழைய விஷயமாக, மிகவும் பழைய விஷயமாக மாறிவிடுகிறது.

தற்போது வந்திருக்கும் புதிய விஷயங்கள் மீது மேலும் சில புதிய விஷயங்கள் வந்து விடும். அப்படி இருக்கும் பொழுது, அவர்களுக்கு அழுத்தம் என்பது இயல்பாகவே வந்து விடுகிறது.

மகிழ்ச்சியான விஷயம்

இப்போது வேங்கை வேல் புகாரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது என்பது மகிழ்ச்சியான விஷயம். இதைப் பற்றி எதிர் கருத்து சொல்லும் பொழுது, அது வேறு விஷயமாக மாறி அப்படியே சென்று கொண்டே இருக்கும். ஒரு கட்சி ஆட்சி செய்யும் பொழுது, எதிர்க்கட்சியானது ஆளுங்கட்சியை இதை செய்யக்கூடாது; அதை செய்யக்கூடாது என பல விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால், அதே எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக வரும் பொழுது, அவர்களும் அதே விஷயத்தை செய்கிறார்கள். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், இங்கே எதிர்ப்பதற்கும், பேசுவதற்கும் ஏதோ ஒரு விஷயம் இருந்து கொண்டே இருக்கிறது; அரசாங்கத்தை ஆதரித்து அவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை வாங்கிக் கொள்வது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.

அதே நேரம், அரசாங்கத்தை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் குற்றம் செய்யும் பொழுது அதை சுட்டிக் காட்ட வேண்டியது மக்களுடைய கடமை. ஜல்லிக்கட்டை எடுத்துக் கொள்வோம் அதற்கு உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை. மக்கள் முன் நின்று போராட்டம் நடத்திய பின்னர்தான், நமக்கு அது மீண்டும் கிடைத்தது. அதேபோல இங்கு மக்கள் பிரச்சினையை மக்கள் பேசினால்தான் விஷயம் நடக்கும்.

நான் கட்சிக்கு அப்பாற்பட்டவன். வேங்கை வயல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க காவல் துறை தன்னுடைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.’ என்று பேசினார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.