சினிமாவில் இருந்து எப்போது ஓய்வு? - ‘நான் எதையும் சாதரணமாக எடுக்க விரும்பவில்லை’ - ஓப்பனாக பேசிய அஜித்குமார்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சினிமாவில் இருந்து எப்போது ஓய்வு? - ‘நான் எதையும் சாதரணமாக எடுக்க விரும்பவில்லை’ - ஓப்பனாக பேசிய அஜித்குமார்!

சினிமாவில் இருந்து எப்போது ஓய்வு? - ‘நான் எதையும் சாதரணமாக எடுக்க விரும்பவில்லை’ - ஓப்பனாக பேசிய அஜித்குமார்!

Kalyani Pandiyan S HT Tamil
Published May 02, 2025 12:04 PM IST

மக்கள் தங்களது வாழ்க்கை குறித்து நொந்து கொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை காலை நாம் நல்லபடியாக கண்விழித்தாலே அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம். நான் இதனை ஏதோ தத்துவவாதியாக நினைத்து சொல்ல வில்லை

சினிமாவில் இருந்து எப்போது ஓய்வு? - ‘நான் எதையும் சாதரணமாக எடுக்க விரும்பவில்லை’ - ஓப்பனாக பேசிய அஜித்குமார்!
சினிமாவில் இருந்து எப்போது ஓய்வு? - ‘நான் எதையும் சாதரணமாக எடுக்க விரும்பவில்லை’ - ஓப்பனாக பேசிய அஜித்குமார்!

இது குறித்து அவர் பேசும் பொது, ‘அதைப் பற்றி எனக்குத் தெரியாது. இது நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று திட்டமிடுவது பற்றி அல்ல; நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். ஆனால், நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்த விரும்புகிறேன்.

மக்கள் தங்களது வாழ்க்கை குறித்து நொந்து கொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை காலை நாம் நல்லபடியாக கண்விழித்தாலே அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம். நான் இதனை ஏதோ தத்துவவாதியாக நினைத்து சொல்ல வில்லை

நான் அறுவை சிகிச்சைகள் மற்றும் காயங்களை கடந்து வந்திருக்கிறேன். எனக்கு புற்றுநோயிலிருந்து தப்பிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இருக்கிறார்கள். உயிருடன் வாழ்வதின் மூலமாக வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நான் என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்த விரும்புகிறேன். ஆம், அதனை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அந்தளவு அதிகம் பயன்படுத்த நினைக்கிறேன்’ என்று கூறினார்.

நடிப்புத்துறை குறித்து பேசிய அவர் ‘ நடிப்புத்துறைக்கு நான் வர வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் ஒரு தற்செயலான நடிகன். பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஒரு வாகன உற்பத்தி நிறுவனத்தில் ஆறு மாதங்கள் வேலை பார்த்தேன்.

மோட்டார் சைக்கிள் ரேசில் நான் கலந்து கொண்ட போது எனக்கு 18 வயது... அடுத்தது என்ன என்று யோசிப்பதற்குள் நான் பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கி விட்டேன்"என்று கூறினார்.