Ajith Kumar: ‘கல்யாணத்திற்கு பிறகு நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் கண் கூடா பார்த்துருக்காங்க.. கூடுதல் பலமா’ - அஜித் எமோஷனல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: ‘கல்யாணத்திற்கு பிறகு நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் கண் கூடா பார்த்துருக்காங்க.. கூடுதல் பலமா’ - அஜித் எமோஷனல்

Ajith Kumar: ‘கல்யாணத்திற்கு பிறகு நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் கண் கூடா பார்த்துருக்காங்க.. கூடுதல் பலமா’ - அஜித் எமோஷனல்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 26, 2025 10:53 AM IST

Ajith Kumar: ஒரு படம் தோல்வியடையும் பொழுதோ அல்லது அந்த படம் நினைத்த அளவு வெற்றி அடையாத போதோ, அது குறித்தான கவலையை நான் என்னுடைய அப்பா, அம்மா அண்ணன் உள்ளிட்டோரிடம் பகிர்வேன். குறிப்பாக, என்னுடைய இரண்டாவது தூணாக இருக்கக்கூடிய என்னுடைய மனைவி ஷாலினியிடம் பகிர்வேன். - அஜித்குமார்

Ajith Kumar: ‘கல்யாணத்திற்கு பிறகு நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் கண் கூடா பார்த்துருக்காங்க.. கூடுதல் பலமா’ - அஜித் எமோஷனல்
Ajith Kumar: ‘கல்யாணத்திற்கு பிறகு நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் கண் கூடா பார்த்துருக்காங்க.. கூடுதல் பலமா’ - அஜித் எமோஷனல்

இந்த நிலையில் தோல்விகளின் போது அதை தான் எப்படி கையாள்வேன் என்பது குறித்து அஜித் கடந்த 11 வருடங்களுக்கு விஜய் டிவிக்கு பேசி இருந்தார். அந்த பேட்டியை பார்க்கலம்.

இது குறித்து அவர் பேசும் போது, ‘ஒரு திரைப்படம் வெற்றிபெறும் பொழுது, அதில் நடித்த கதாநாயகனுக்கு அதிகப்படியான புகழ் கிடைப்பது போல, படம் தோல்வி அடையும் போது, அந்த நடிகருக்கு அதிகப்படியான விமர்சனமும் வரும்.

வெற்றியும் தோல்வியும்

ஒவ்வொரு படத்தினுடைய வெற்றியும் தோல்வியும் எங்களை மிகவும் பாதிக்கும். அது மனரீதியாக, எமோஷனல் ரீதியாக என எல்லா வழிகளிலும் எங்களை வந்தடையும். ஒரு படம் தோல்வியடையும் பொழுதோ அல்லது அந்த படம் நினைத்த அளவு வெற்றி அடையாத போதோ, அது குறித்தான கவலையை நான் என்னுடைய அப்பா, அம்மா அண்ணன் உள்ளிட்டோரிடம் பகிர்வேன். குறிப்பாக, என்னுடைய இரண்டாவது தூணாக இருக்கக்கூடிய என்னுடைய மனைவி ஷாலினியிடம் பகிர்வேன்.

என்னுடைய கல்யாணத்திற்கு பிறகு நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் அவர் கண்கூடாக பார்த்திருக்கிறார். அவர் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட் என்று தான் கூறுவேன். அவரும் சினிமா துறையில் இருப்பதால் அதுவும் எனக்கு கூடுதல் பலமாக இருந்திருக்கிறது.

கணவராக மாறும்போது

நீங்கள் ஒரு வாலிபராக இருப்பதற்கும் ஒரு கணவனாக மாறுவதற்குமிடையே நிறைய வித்தியாசம் இருக்கின்றன. நீங்கள் திருமணமான பின்னர் உங்களுடைய எண்ண ஓட்டங்கள் முற்றிலுமாக மாறுபடும்; காரணம் உங்களுக்கு அதிக பொறுப்பு வந்துவிடும். அது அனைத்தும் எனக்கு உதவிகரமாக இருந்தது. சில தவறான முடிவுகளும் எடுத்து இருக்கிறேன் அதற்கான விலையையும் நான் கொடுத்திருக்கிறேன்.’ என்று பேசினார்.

விடாமுயற்சி படம்

நடிகர் அஜித் குமார்- திரிஷா கூட்டணியில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. ஆங்கிலத்தில் வெளியான பிரேக் டவுன் படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த தேதியில் இருந்து பின்வாங்கியது. அதன் பின்னர் இந்த திரைப்படம் பிப்ரவரி 6 ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. பிரேக் டவுன் படக்குழுவுடன் ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாகவே படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்றும் அதன் பின்னர் ஏற்பட்ட சமரச பேச்சுவார்த்தையின் காரணமாக விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதிக்கு ரிலீஸ் ஆவதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து பேசிய விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி, விடாமுயற்சி திரைப்படம் என்னுடைய கதை இல்லை. கணவன் - மனைவிக்குள் நடக்கும் விஷயங்களை ஆக்‌ஷனோடு கலந்து சொல்லி இருக்கிறேன் என்று கூறினார். முன்னதாக இந்தப்படத்தில் இருந்து வெளியான சவாதீகா பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அண்மையில் வெளியான விடாமுயற்சி பாடலும் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.