Pa Ranjith: நான் நன்றி கெட்டவனா?… ‘ நம்ம சிரிப்பு அவ்வளவு பவர் ஃபுல்’ - ரஜினி ரசிகர்களுக்கு பா.ரஞ்சித் பதிலடி!
அவரது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் வகையில் சென்னையின் பல்வேறு இடங்களில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

வானம் கலை விழாவில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் ரஜினிகாந்தை பா.ரஞ்சித் இழிவு படுத்தியதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “உண்மையில் நாம் விழிப்புணர்வு கொண்ட சமூகமாக இருக்கிறோமா?, விழிப்புணர்வு ஏன் இல்லாமல் இருக்கிறது. நம்முடைய கலையை இன்னும் ஏன் பொது வெளி தளத்திற்கு கொண்டு செல்லாமல் இருக்கிறோம், நமக்குள் எது தடையாக இருக்கிறது, எதை தடையாக நினைக்கிறோம், உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் தேட வேண்டிய காலகட்டமாக இது இருக்கிறது.
சும்மா சிரித்ததற்கே பல பல அர்த்தங்களை சொல்லும் இடத்தில் இருக்கிறோம். அப்படியானால் நமது சிரிப்பு எவ்வளவு சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருப்பதாக நம்புகிறேன். இந்த காலகட்டத்தில் நாம் விழிப்புணர்வு அடையவில்லை என்றால் எப்பொழுதுமே விழிப்புணர்வு அடைய முடியாது.” என்று பேசினார்.