Pa Ranjith: எந்த ஆண்ட பரம்பரைக்கும் திராணி இல்லை..யாவரும் சாதியவாதிகளே.. ஜல்லிக்கட்டிலும் சாதிய பாகுபாடு - பா. ரஞ்சித்
Director Pa Ranjith: ஜல்லிக்கட்டிலும் சாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. அது எங்கள் சாதிக்கான விளையாட்டு எனச் சொல்வதற்கு எந்த ஆண்ட பரம்பரைக்கும் திராணி இல்லை. சமூக நீதி ஆட்சியில் போலீஸ் காவிமயமாகிறது என்று பா. ரஞ்சத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார் பா. ரஞ்சித். தற்போது சார்பட்டா 2 படத்தின் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
பொங்கலை முன்னிட்டு உலக அளவில் புகழ் பெற்ற மதுரை பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலகலமாக முடிவடைந்துள்ள நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிலும் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாக இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆண்ட பரம்பரைக்கு திராணி இல்லை
இதுதொடர்பாக அவர் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் நீலம் சோசியல் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய நாம்தான், அதிலும் சாதி உள்ளது என்றவுடன் மௌனம் காக்கிறோம்! ஜல்லிக்கட்டைத் தடை செய்தபோது, ஒட்டுமொத்த தமிழகமும் போராடிய தருணத்தில், அது எங்கள் சாதிக்கான விளையாட்டு எனச் சொல்வதற்கு எந்த ஆண்ட பரம்பரைக்கும் திராணி இல்லை.