கத்தியால் குத்தியவரிடமே கருணையை எதிர்பார்க்கும் கயல்.. பயத்தில் தவிக்கும் பெரியப்பா!.. கயல் சீரியல் அப்டேட்
எழிலை கத்தியால் குத்தியவர்கள் யார் என கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என கயல், சரவண வேலுவிடம் கூறுகிறார்.

சிறு வயதில் இருந்து கயல் தான் என் மனைவி என மனதில் ஆசை வைத்து காத்திருந்த சரவண வேலுவிற்கு, கயல் எழிலை திருமணம் செய்து கொண்டதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் எப்படியாவது எழில் இருக்கும் அந்த இடத்தில் தான் இருப்பேன் என சவால் விட்டு கயலையே சுத்தி சுத்தி வந்தார்.
சரவண வேலு திட்டம்
இதற்கிடையில், சொந்த ஊருக்கு வந்த கயல், குடும்பத்துடன் திரும்ப ஊருக்கு செல்ல முடிவெடுத்த சமயத்தில், கயலுக்கு ஊர் சுற்றி காண்பிப்பதாகக் கூறி சரவண வேலு அழைக்கிறான். அப்போது, கயல் எழிலையும் அழைத்ததால் சரவண வேலு ஆத்திரம் அடைகிறான்.
பின், இவர்கள் மூவரும் ஊரைச் சுற்றிப் பார்க்க செல்லும் போது, கயலும் எழிலும் ரொமான்ஸ் செய்வதை சரவண வேலுவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், எழிலை தீர்த்துக் கட்ட சரவண வேலு, அவனுடைய ஆட்களை வைத்து திட்டம் தீட்டுகிறான்.
