காருக்குள் அட்ராசிட்டி செய்யும் கயல்.. கடுப்பாகும் சரவண வேலு.. கயல் சீரியல் அப்டேட்
சொந்த ஊருக்கு வந்த கயல், எழிலுடன் சேர்ந்து ஊரை சுற்றிப் பார்க்கிறார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் சரவண வேலு கோபமடைகிறார்.

காருக்குள் அட்ராசிட்டி செய்யும் கயல்.. கடுப்பாகும் சரவண வேலு.. கயல் சீரியல் அப்டேட்
கல்யாணம் முடிந்த கையோடு, தன் அப்பா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானது. அவர் ஒரு நிரபராதி என்பதை மக்களுக்கு நிரூபித்தே தீருவேன் என முடிவெடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இங்கு வந்த அவர், தன்னை நெருங்கி வந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து எழிலுடன் நேரத்தை செலவழிக்க விரும்புகிறார்.
எழிலுடன் ஊரை சுற்றும் கயல்
இதனால், தனக்கு உதவி செய்ய வந்த சரவண வேலுவையே டிரைவராக்கி ஊரை சுற்றிக் காண்பிக்குமாறு கூறுகிறார். கயலை கல்யாணம் செய்வது தான் தன் வாழ்நாள் லட்சியம் என பல வருடங்களாக காதலுடன் காத்திருந்த சரவண வேலுவிற்கு இது கோவத்தை ஏற்படுத்தினாலும், அவன் அதை கயலுக்காக ஏற்றுக் கொள்கிறான்.