அழகனை போட்டுக் கொடுக்க கிளம்பிய கும்பல்.. கடைசி நிமிடம் வரை பரபரப்பாகும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
அழகனை நினைத்து அழும் ஆனந்தியிடம் உண்மையை சொல்லியே ஆக வேண்டும் என முத்துவும், ஆட்டோக்காரரும் முயற்சி செய்கின்றனர்.

அழகனை போட்டுக் கொடுக்க கிளம்பிய கும்பல்.. கடைசி நிமிடம் வரை பரபரப்பாகும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்
ஆனந்தியிடம் அழகன் என்ற பெயரில் கடிதம் எழுதி காதலித்தது தான் தான் என்ற உண்மை தெரியக் கூடாது என்பதற்காகவும், தான் இங்கிருந்தால் மகேஷுடன் ஆனந்திக்கு கிடைக்கும் நல்ல வாழ்க்கை பாதிக்கும் என்றும் நினைத்து அன்பு வங்கதேசத்திற்கு வேலைக்கு செல்கிறான்.
அன்புவை அவரது தங்கையும், ஆனந்தியும், நண்பன் முத்துவும் எவ்வளவோ தடுத்தும் அன்பு தன் முடிவை மாற்றிக் கொள்ளாமல் வெளிநாட்டிற்கு கிளம்பி விட்டான்.
கேள்வி கேட்கும் தங்கை
இந்நிலையில், ஆனந்தி மேல் தனக்கு எவ்வித காதலும் இல்லை எனக் கூறிய அன்பு, இத்தனை நாள் ஆனந்தி படுத்து தூங்கிய தலையணை கவரை வெளிநாட்டிற்கு போகும் போது எடுத்துச் சென்றுள்ளார். இது அவரது தங்கைக்கு தெரியவர உடன் போன் செய்து இதுபற்றி விசாரிக்கிறார். இதையடுத்து அன்பு என்ன சொல்வது எனத் தெரியாமல் திணறி வருகிரார்.
