Ajithkumar: ரேஸிங்கில் மட்டும் முழு கவனம்.. ஆறு மாதங்கள் மட்டுமே தான் நடிப்பு.. அப்புறம்! அஜித்குமார் சொன்ன விஷயம்
Ajithkumar on Racing: ரேஸிங் சீசனில் அதில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். ரேஸிங் இல்லாத காலகட்டத்தில் திரைப்படங்களில் கமிட்டாகி நடிப்பேன் என்று சர்வதேச ரேஸிங் நிகழ்வின்போது அளித்த பேட்டியில் நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகரான அஜித்குமார் நடிப்பு தவிர ரேஸ் விளையாட்டிலும் பங்கேற்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அத்துடன் போட்டோகிராபி, சமையல், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றின் மீது மிகவும் ஆர்வம் மிக்கவராகவும் உள்ளார். இந்தியா முழுவதும் பைக்கிலேயே சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் குமார், தற்போது துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார்.
அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கி துபாயில் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் 20வது சர்வதேச ரேஸிங் பந்தயத்தில் பங்கேற்கிறார் அஜித்குமார். இதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். பயிற்சியில் இடையில் போட்டி அமைப்பாளர்களிடம் பேட்டியளித்த போது ஷாக் தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார் அஜித்குமார்.
ரேஸிங்கில் மட்டும் முழு கவனம்
"செப்டம்பர் மாதம் வரை கார் ரேஸ் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த கார் ரேஸ் பந்தயம் முடியும் வரை நான் எந்தவொரு படத்திலும் நடிக்க மாட்டேன். கார் ரேஸிங் இல்லாத நேரங்களில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் படங்களில் நடிப்பேன். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். ரேஸிலும் முழு கவனம் செலுத்த முடியும். தற்போது விளையாட்டில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். ட்ரைவராக மட்டுமில்லாமல் ஓனராகவும் அதை செய்ய நினைக்கிறேன்.