‘விஷாலுக்கு உதவி பண்ண யாரும் தயாரா இல்ல.. இது அவர பிடிச்ச ஏழரை சனி’- பயில்வான் பகீர்
விஷாலின் நிலையை பார்த்து அவருக்கு உதவி செய்ய யாரும் தயாராக இல்லை என பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

‘விஷாலுக்கு உதவி பண்ண யாரும் தயாரா இல்ல.. இது அவர பிடிச்ச ஏழரை சனி’- பயில்வான் பகீர்
தமிழ் சினிமாவில் 6 பேக், 8 பேக் என மாஸாக வலம் வந்தவர் விஷால். 6 அடி உயிரம், கட்டுக்கோப்பான உடல்வாகு இதுதான் இவரது அடையாளமாக இருந்தது. ஆனால், அந்த அடையாளம் சமீப காலங்களில் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.
அவரது ரத்னம் படம் வெளியான சமயத்திலேயே அவர் உடல்நிலையை பார்த்து பலரும் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்வி 12 ஆண்டுக்கு பின் வெளியாக இருக்கும் மதகஜராஜா படத்தின் நிகழ்ச்சியில் பேசுபொருளானது.
விஷால் உடல்நிலை
நடுங்கும் கைகள், குரல் என்பது மட்டுமின்றி, நிற்கக் கூட முடியாத நிலையிலும் தன் படத்தின் புரொமோஷனுக்கு வந்தார் விஷால். இப்படி இவரை பார்த்த ரசிகர்கள் இவருக்கு என்ன ஆனது என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை.