ரொம்ப கஷ்டமா இருக்கு.. கெளதம் மேனன தாக்கி பேசணும்னு வைக்கல" - உண்மையை உடைத்த கார்த்திக் நரேன்
ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கக் கூடிய வசனங்கள், கௌதம் வாசுதேவ் மேனனை தாக்கி இருப்பது போல இருப்பதாக கேள்வி கேட்கிறீர்கள்? அதற்கு என்னுடைய பதில்," - கார்த்திக் நரேன்

துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி கவனம் ஈர்த்தவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். இவரது அடுத்தப்படமாக உருவானதுதான் நரகாசுரன். அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரித்து இருக்கிறார்.
கார்த்திக் நரேன் உடன் ஏற்பட்ட பிரச்சினை, நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக அந்தப்படம் முடங்கியே கிடக்கிறது. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கிய படங்களும் தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது நிறங்கள் மூன்று திரைப்படம் மூலம் மீண்டும்
திரைக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் இந்தப்படம் தொடர்பாக பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தன்னுடைய இரண்டாவது படம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அவர் பேசி இருக்கிறார்.