விஜய் படத்துக்கு சிக்கலைத் தரும் கமல்.. ஜனநாயகனை குறிவைக்கும் நெட்டிசன்கள்! என்ன நடக்கிறது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய் படத்துக்கு சிக்கலைத் தரும் கமல்.. ஜனநாயகனை குறிவைக்கும் நெட்டிசன்கள்! என்ன நடக்கிறது?

விஜய் படத்துக்கு சிக்கலைத் தரும் கமல்.. ஜனநாயகனை குறிவைக்கும் நெட்டிசன்கள்! என்ன நடக்கிறது?

Malavica Natarajan HT Tamil
Published Jun 03, 2025 05:28 PM IST

நடிகர் கமல் ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை எனில் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தற்போது சிக்கல் வந்துள்ளது.

விஜய் படத்துக்கு சிக்கலைத் தரும் கமல்.. ஜனநாயகனை குறிவைக்கும் நெட்டிசன்கள்! என்ன நடக்கிறது?
விஜய் படத்துக்கு சிக்கலைத் தரும் கமல்.. ஜனநாயகனை குறிவைக்கும் நெட்டிசன்கள்! என்ன நடக்கிறது?

ஜனநாயகனுக்கு சிக்கல்

நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளதால், அவர் சினிமாவிற்கு முழுக்கு போட நினைத்து இயக்குநர் ஹெச். வினோத்துடன் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம். அதன் பின் முழுநேர அரசியலுக்கு சென்று விடுவேன் என அறிவித்தார். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், படத்தின் வெளியீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கர்நாடக மாநிலத்தின் கமலுக்கு எதிரப்புகள் அதிகரிக்க தொடங்கியதாலும், தக் லைஃப் படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்து வருவதாலும், கர்நாடகாவைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்த நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக் கூடாது என சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால், தமிழ்- கன்னட மக்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

மன்னிப்பு கேட்காமல் பாதுகாப்பு தேடல்

முன்னதாக, "நீங்கள் கமல்ஹாசனாக இருக்கலாம் அல்லது வேறு யாராக இருக்கலாம், நீங்கள் மக்களின் உணர்வுகளை புண்படுத்த முடியாது. இந்த நாட்டின் பிரிவு மொழி அடிப்படையில் உள்ளது. ஒரு பொது நபர் அத்தகைய அறிக்கைகளை வெளியிட முடியாது. அதனால் என்ன நடந்தது என்றால் அமைதியின்மை, ஒற்றுமை இல்லாமை. கர்நாடக மக்கள் மன்னிப்பு கேட்டார்கள். இப்போது நீங்கள் இங்கு பாதுகாப்பு தேடி வருகிறீர்கள்," என்று கன்னட உயர் நீதிமன்றம் கமல் ஹாசன் தரப்பை கண்டித்தது.

நீங்கள் வரலாற்று ஆய்வாளரா?

அத்தோடு, நீதிமன்றம் கமல்ஹாசனின் நிபுணத்துவத்தையும் கேள்விக்குள்ளாக்கியது, "எந்த அடிப்படையில் நீங்கள் அறிக்கையை வெளியிட்டீர்கள், நீங்கள் வரலாற்று ஆய்வாளரா, மொழியியலாளரா? எந்த அடிப்படையில் நீங்கள் பேசினீர்கள்? " என்றது. மேலும், 75 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற அறிக்கையை வெளியிட்ட ராஜகோபால் ஆச்சார்யாவின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, தனது படத்தை வெளியிடுவதற்கு பாதுகாப்பு தேடுவதற்குப் பதிலாக, கமல்ஹாசனின் மன்னிப்பு பொருத்தமாக இருந்திருக்கும் என்று நீதிமன்றம் கூறியது.