Nenjathai Killathe: மதுவுக்காக மாப்பிள்ளை பார்த்த கௌதம்.. ப்ரோக்கர் கொடுத்த ஷாக்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nenjathai Killathe: மதுவுக்காக மாப்பிள்ளை பார்த்த கௌதம்.. ப்ரோக்கர் கொடுத்த ஷாக்!

Nenjathai Killathe: மதுவுக்காக மாப்பிள்ளை பார்த்த கௌதம்.. ப்ரோக்கர் கொடுத்த ஷாக்!

Aarthi Balaji HT Tamil
Published Jul 17, 2024 11:38 AM IST

Nenjathai Killathe: மதுமிதா வீட்டிற்கு வந்த ப்ரோக்கர் பொண்ணுக்கு 35 வயசாகுது, ஆனால் சின்ன வயசு போட்டோவை கொடுத்து இருக்கீங்க என்று சொல்ல மதுவின் அம்மா எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, என் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கொடுங்க என்று சொல்கிறாள்.

மதுவுக்காக மாப்பிள்ளை பார்த்த கௌதம்.. ப்ரோக்கர் கொடுத்த ஷாக்
மதுவுக்காக மாப்பிள்ளை பார்த்த கௌதம்.. ப்ரோக்கர் கொடுத்த ஷாக்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் நேற்றைய ( ஜூலை 17 ) எபிசோடில் மதுவிற்கு நான் மாப்பிளை பார்க்கிறேன் என்று கௌதம் சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மதுவிற்கு மாப்பிள்ளை

அதாவது, கௌதம் சந்தோஷிடம் எப்படியாவது மதுவிற்கு ஒரு நல்ல மாப்பிள்ளையாக பார்க்க வேண்டும் என்று சொல்ல சந்தோஷ் அதெல்லாம் கஷ்டம் என்று சொல்ல கௌதம் மேட்ரிமணி என எல்லாவற்றிலும் விளம்பரம் கொடு என்று சொல்கிறான்.

என் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை

இதையடுத்து மதுமிதா வீட்டிற்கு வந்த ப்ரோக்கர் பொண்ணுக்கு 35 வயசாகுது, ஆனால் சின்ன வயசு போட்டோவை கொடுத்து இருக்கீங்க என்று சொல்ல மதுவின் அம்மா எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, என் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கொடுங்க என்று சொல்கிறாள்.

கௌதமுக்கு நிறைய வரன்

மறுபக்கம் கௌதமுக்கு நிறைய வரன் வருவதாக சொந்தக்காரர் ஒருவர் சொல்ல சகுந்தலா நாங்களே ஒரு பங்ஷனை வச்சி கல்யாணம் பற்றி அறிவிக்க போறோம் என்று சொல்கிறாள். அடுத்து கௌதம் சந்தோஷிடம் ஒரு 20 மாப்பிளையை தேர்வு செய்து வைத்திருக்கேன், அதை மதுவுக்கு அனுப்பு நான் அவங்ககிட்ட பேசுகிறேன் என்று சொல்லி போன் செய்ய மது காலேஜில் இருப்பதாக போனை வைத்து விடுகிறாள்.

மறுபக்கம் கௌதமுக்கு நிறைய வரன் வருவதாக சொந்தக்காரர் ஒருவர் சொல்ல சகுந்தலா நாங்களே ஒரு பங்ஷனை வச்சி கல்யாணம் பற்றி அறிவிக்க போறோம் என்று சொல்கிறாள். அடுத்து கௌதம் சந்தோஷிடம் ஒரு 20 மாப்பிளையை தேர்வு செய்து வைத்திருக்கேன், அதை மதுவுக்கு அனுப்பு நான் அவங்ககிட்ட பேசுகிறேன் என்று சொல்லி போன் செய்ய மது காலேஜில் இருப்பதாக போனை வைத்து விடுகிறாள்.

காலேஜ்க்கு கிளம்பிய கௌதம்

சந்தோஷ் இதெல்லாம் நேரில் பேசினால் சரியா இருக்கும் என்று சொல்ல கௌதம் காலேஜ்க்கு கிளம்பி வந்து மதுவை விசாரிக்க பெரிய பிசினஸ் மேன் என்பதை அறிந்து கொள்ளும் மாணவர்கள் யாரோ ஒரு பொண்ணை தான் பார்க்க வந்திருப்பதாக பேசி கொள்ள மது இருக்கும் இடத்திற்கு சென்று காரை நிறுத்துகிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.