Nayanthara : ‘கீழ்த்தரமாக பேசினாலும்.. தவறாக நடந்து கொண்டாலும்..’ நயன்தாரா ‘நச்’ பேச்சு!
Nayanthara : ‘காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும், நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையாக தொடர்ந்து உழைக்க வேண்டும்’

Nayanthara : ‘யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நேர்மையாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி காணலாம்’ என, மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா பேசினார்.
பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் 2025ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வு மற்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பங்கேற்று விற்பனையை அதிகரித்த முகவர்களுக்கான பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, விழாவில் நயன்தாரா ஆற்றிய உரை இதோ:
தவறாக நடந்து கொண்டாலும்..
‘‘ என் வாழ்க்கையில் நான் நம்புகிற இரண்டு விஷயங்கள் உண்டு தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் இருந்தால் போதும். எவ்வளவு நடந்தாலும், யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும் இந்த இரண்டு விஷயங்களை விட்டுவிடக்கூடாது. இதை நாம் கடைபிடித்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும். நமக்கு நம்மேல் தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் வேறு எந்த விஷயமும் கிடையாது.