Nayanthara : ‘கீழ்த்தரமாக பேசினாலும்.. தவறாக நடந்து கொண்டாலும்..’ நயன்தாரா ‘நச்’ பேச்சு!
Nayanthara : ‘காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும், நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையாக தொடர்ந்து உழைக்க வேண்டும்’
![Nayanthara : ‘கீழ்த்தரமாக பேசினாலும்.. தவறாக நடந்து கொண்டாலும்..’ நயன்தாரா ‘நச்’ பேச்சு! Nayanthara : ‘கீழ்த்தரமாக பேசினாலும்.. தவறாக நடந்து கொண்டாலும்..’ நயன்தாரா ‘நச்’ பேச்சு!](https://images.hindustantimes.com/tamil/img/2025/01/10/550x309/Nayanthara_Madurai_1736526664733_1736526671716.jpg)
Nayanthara : ‘யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நேர்மையாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி காணலாம்’ என, மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா பேசினார்.
பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் 2025ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வு மற்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பங்கேற்று விற்பனையை அதிகரித்த முகவர்களுக்கான பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, விழாவில் நயன்தாரா ஆற்றிய உரை இதோ:
தவறாக நடந்து கொண்டாலும்..
‘‘ என் வாழ்க்கையில் நான் நம்புகிற இரண்டு விஷயங்கள் உண்டு தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் இருந்தால் போதும். எவ்வளவு நடந்தாலும், யார் நம்மை கீழே இறக்க நினைத்தாலும் இந்த இரண்டு விஷயங்களை விட்டுவிடக்கூடாது. இதை நாம் கடைபிடித்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும். நமக்கு நம்மேல் தன்னம்பிக்கையும், மரியாதையும் இருந்தால் அதற்கு மேல் வேறு எந்த விஷயமும் கிடையாது.
உண்மையாக உழைக்க வேண்டும்
இந்த தன்னம்பிக்கை நம்மிடையே வரவேண்டும் என்றால் நேர்மையாக உழைக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் யார் என்ன சொன்னாலும், நம்மை எவ்வளவு கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் தவறாக நடந்து கொண்டாலும், நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்மையாக தொடர்ந்து உழைக்க வேண்டும். அப்போது தான் நமக்கு தன்னம்பிக்கை வரும்.
இதன் மூலம் நமது வாழ்க்கையே மாறிவிடும். உண்மையும், உழைப்பும், உயிர் இருக்கும் வரை இருந்தால் நமது வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்,’’ என்றார். நிகழ்ச்சியில் நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த நிகழ்வில் பங்கேற்க வந்த நயன்தாராவிற்கு பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், நயன்தாராவை காண, ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. நயன்தாரா வருகையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் நயன்தாரா பேசும் போது, அங்கு அமர்ந்திருந்த பார்வையாளர்கள், தங்கள் மகிழ்ச்சியை கைதட்டல் மூலம் வெளிப்படுத்தினர்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்