Nayanatara: 15 ஆண்டுகள் கழித்து கன்னட சினிமாவில் மீண்டும் நயன்தாரா.. கன்பார்ம் செய்த வில்லன் நடிகர்
Actress Nayantara: தமிழ், தெலுங்கு, தாய் மொழி மலையாளம் என மாறி மாறி நடித்து வந்த நயன்தாரா 15 ஆண்டுகள் கழித்து கன்னட சினிமாவில் மீண்டும் நடிக்கிறார். இது அவரது இரண்டாவது கன்னட படமாக அமைகிறது.

கேஜிஎஃப் சீரிஸ் படங்களின் வெற்றியை தொடர்ந்து கன்னட நடிகர் யாஷ் நடித்து வரும் புதிய படம் டாக்ஸிக். மலையாள சினிமாக்களில் ஹீரோயினாக நடித்த கீது மோகன் தாஸ் இந்த படத்தை இயக்குகிறார். இவர் தமிழில் சத்யராஜ் - சுஹாசினி நடித்த என் பொம்மகுட்டி அம்மாவுக்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.
டாக்ஸிக் படத்துக்காக கர்நாடக வனப்பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை படக்குழுவினர் வெட்டி சாய்த்துள்ளது தொடர்பாக விளக்கம் கேட்டு கர்நாடக அரசாங்கம் சார்பில் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது.
டாக்சிக் படத்தில் நயன்தாரா
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகரான அக்ஷய் ஓபராய் அளித்த பேட்டியில், " நான் தற்போது ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் நயன்தாரவும் நடிக்கிறார். இதற்கு மேல் படம் பற்றி பேசுவதை படக்குழுவினர்கள் விரும்பமாட்டார்கள்.
நான் இயக்குநர் கீது மோகன்தாஸின் ரசிகன். அவரது லையர் டைஸ், மூத்தோன் படங்கள் பார்த்துள்ளேன். அருமையாக இருக்கும். பைட்டர் படத்தை பார்த்து என்னை டாக்ஸிக் படத்தில் கமிட் செய்தார். இது எனது முதல் தென்னிந்திய படமாகும்" என்றார்.
டாக்ஸிக் படத்தில் நயன்தாரா நடிக்கிறாரா இல்லையா என கடந்த சில மாதங்களாக உலா வந்த தகவலுக்கு தற்போது முற்றுப்புள்ள வைத்துள்ளார் அக்ஷய் ஓபராய். இதன் மூலம் 2010இல் வெளியான சூப்பர் படத்துக்கு பின்னர் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் கன்னட சினிமாவில் தலை காட்டவுள்ளார் நயன்தாரா.
முன்னதாக, டாக்ஸிக் படத்தில் நயன்தாரா, நடிகர் யாஷ் சகோதரியாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. இந்க சூழ்நிலையில் தற்போது படத்தின் நயன்தாரா நடிப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், விரைவில் அவரது கதாபாத்திரம் குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டாக்ஸிக் படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்ஸிக் படம்
கன்னட சினிமாவில் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ் நடித்து வரும் டாக்ஸிக் படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. விறுவிறுப்பாக படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீஸர் ஜனவரி 8ஆம் தேதி யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா கத்தாரியா, ஹூமா குரோஷி என நான்கு ஹீரோயின்கள் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இதில் தற்போது நயன்தாரா நடிப்பது உறுதியாகியிருக்கும் நிலையில் மற்ற ஹீரோயின்கள் பற்றி படக்குழுவினர் ரகசியம் காத்து வருகிறார்கள்.
டாக்சிக் பட கதை
டாக்ஸிக் படம் 1950-1970 காலகட்டத்தில் நடக்கும் கதையாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. போதைப்பொருளுக்கு எதிரான பின்னணியில் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் படம் உருவாக இருக்கும் இந்த படத்தில் யாஷ் ஸ்டைலிஷ் டான் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். படத்தை 2025 ஏப்ரலில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். கேஜிஎஃப் படம் போல் டாக்சிக் படமும் பான் இந்தியா படமாக தயாராகவுள்ளது.

டாபிக்ஸ்