Wayanad landslides:கோரத்தின் உச்சம்.. கண்ணீர் கடலில் கடவுளின் தேசம்.. உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா!
Nayanthara: கேரள வயநாடில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் உதவிகரம் நீட்டி இருக்கின்றனர்.

Wayanad landslides:
கோரத்தின் உச்சம்.. கண்ணீர் கடலில் கடவுளின் தேசம்.. உதவிக்கரம் நீட்டிய நயன்தாரா!
Wayanad landslides: கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை 2 மணி மற்றும் அதிகாலை 4.10 மணியளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில், இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றுவதால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 20 லட்சம் நிதி உதவி அளித்திருக்கிறார்கள். இது தொடர்பான அறிக்கையையும் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.