Rashmika Mandanna: +700 கோடி ரூபாய் வசூல் நடிகை.. ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ் ஆன கதை தெரியுமா?
Rashmika Mandanna: தென்னிந்தியா மட்டுமல்ல பாலிவுட்டிலும் தொடர் ஹிட் கொடுத்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தன் 29ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவர் நேஷனல் கிரஷ் ஆன கதை பற்றி பார்க்கலாம்.

Rashmika Mandanna: சினிமா உலகில் ரஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சி மிகவும் வித்தியாசமானது. முன்பு அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட ரஷ்மிகா மந்தனா, பின்னர் நேஷனல் க்ரஷ் ஆக மாறினார். அவரைப் பலரும் விரும்பத் தொடங்கினர். தனது ஆரம்ப காலத்தில் அவர் குறிப்பிடத்தக்க விமர்சனங்களை எதிர்கொண்டார். அனைத்தையும் அவர் வென்று இந்த இடத்தை பிடித்துள்ளார்.
ராஷ்மிகா சந்தித்த ட்ரோல்கள்
ராஷ்மிகா மந்தனா, கன்னட சினிமாவையும், மொழியையும் புறக்கணிக்கிறார், தன்னை ஹைதராபாத்தை சேர்ந்தவள் என அடையாளப்படுத்துகிறார் என்பது தொடங்கி, சின்ன சின்னதாக அறியாமல் கூறப்படும் வார்த்தைகள் வரை ரசிகர்களால் ககவனிக்கப்பட்டு அவர் தொடர்ச்சியான சமூக ஊடக ட்ரோல்களுக்கு உள்ளானார். இது நாளுக்கு நாள் அதிகரித்த சமயத்தில் தான் என்ன செய்தாலும் ட்ரோலுக்கு உள்ளாக்கப்படுவதாக கவலையும் தெரிவித்தார்.
பாக்ஸ் ஆபிஸ் நாயகி
ஆனால், இவை எதிலும் முடங்கிப் போகாத ராஷ்மிகா மந்தனா, கன்னட சினிமாவில் தனது தொழிலைத் தொடங்கி, இப்போது பிற மொழிப் படங்களிலும் அதிக வாய்ப்புகளைப் பெற்று தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் ஹீரோயினாக ஜொலிக்கிறார். ரஷ்மிகா மந்தனாவின் தொழில் வாழ்க்கை இறக்கங்களை விட உயர்வையே அதிகம் கண்டுள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் அவர் அதிக மதிப்பை சினிமா வட்டாரத்தில் பெற்று வருகிறார்.
சினிமா வாழ்க்கை
ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கன்னட மக்கள் இவரை கொண்டாடினர். பின் இவரது அடுத்தடுத்த படங்கள் மக்களுக்கு பிடித்துப் போகவே இவரை கன்னட க்ரஷ் என செல்லமாக அழைத்து வந்தனர். பின் இவர், தன் தொழில் வாழ்க்கையில் கன்னடத்திலிருந்து தெலுங்குக்கும் விரித்தார்.
நேஷனல் கிரஷ் ஆன நடிகை
இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் வந்த புதிதில், 'இன்கேம் இன்கேம் காவலே' வெளியாகி, இந்திய அளவில் பெரிய ஹிட் அடித்தது. இந்தப் பாடலின் மூலம் அவர் தேசிய அளவில் பிரபலமானார்.
பின், இவரின் எதார்த்த நடிப்பு, எளிமையான தோற்றம், ரசிகர்களுடனான உரையாடல் போன்றவை எல்லாம் வெகுவாக மக்களை கவர, இவர் அதிகம் பேரால் கூகுள் செய்யப்பட்ட நபராக மாறினார். இது அவரின் செல்வாக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதுவரை கன்னடர்களின் கிரஷ்ஷாக இருந்த ராஷ்மிகா மந்தனா, நேஷனல் கிரஷ்ஷாக கூகுளால் அறிவிக்கப்பட்டார்.
சினிமாவின் உச்சம்
இந்த பட்டத்திற்கு பின் தான், அவர் கன்னடம், தெலுங்கு சினிமாவில் மட்டும் இல்லாமல் தமிழ், ஹிந்தி மொழி சினிமாவிலும் ஹிட் கொடுக்கத் தொடங்கினார். இவரது படங்கள் பெரும்பாலும் வசூலை குவித்து விடுகின்றன. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அனிமல், புஷ்பா தி ரூல், சாவா ஆகிய படங்கள் எல்லாம் நம்பமுடியாத அளவு வசூலைக் குவித்து ராஷ்மிகாவை சினிமாவின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
பட்டத்தை விட அன்பு தான் வேண்டும்
இப்படி உச்சத்தில் இருக்கும் போது தான், ராஷ்மிகா மந்தனா தனது நேஷனல் கிரஷ் பட்டம் குறித்து பேசி இருக்கிறார். அப்போது, இதுபோன்ற பட்டங்கள் தொழில் வாழ்க்கையில் எந்தவித உதவியையும் செய்யாது. அவை ரசிகர்களின் அன்பிலிருந்து மட்டுமே வருகின்றன. அவர்கள் அப்படி அழைக்க விரும்புகிறார்கள். அதனால் அழைக்கிறார்கள். ஆனால் இந்தப் பட்டங்கள் வெறும் பட்டங்கள் மட்டுமே. நாம் நடிக்கும் படங்கள், பார்வையாளர்களின் அன்புதான் அவர்கள் வாங்கும் டிக்கெட்டுகளாக மாறுகிறது. அதுதான் எனக்கு சிறப்பு" என்று ரஷ்மிகா கூறியுள்ளார்.
29 ஆவது பிறந்தநாள்
தற்போது தொடர் ஹிட்களை கொடுத்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இரவு பகல் என பாராமல் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை லைன் அப்பில் வைத்து பிஸியாக நடித்து வருகிறார். காய்ச்சல் மட்டுமல்ல காலே உடைந்தாலும் ஷீட்டிங், புரொமோஷுக்கு வந்து தன் தொழில் பக்தியை நிரூபித்த ராஷ்மிகா மந்தனா இன்று அவரது 29 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.
