Hindi Films: ‘இந்திப் படங்களில் ஒன்றும் இல்லை’ - கிழித்து தொங்கப்போட்ட இந்தி நடிகர் நசுருதீன் ஷா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hindi Films: ‘இந்திப் படங்களில் ஒன்றும் இல்லை’ - கிழித்து தொங்கப்போட்ட இந்தி நடிகர் நசுருதீன் ஷா

Hindi Films: ‘இந்திப் படங்களில் ஒன்றும் இல்லை’ - கிழித்து தொங்கப்போட்ட இந்தி நடிகர் நசுருதீன் ஷா

Marimuthu M HT Tamil Published Feb 19, 2024 05:09 PM IST
Marimuthu M HT Tamil
Published Feb 19, 2024 05:09 PM IST

இந்திப் படங்களில் ஒன்றும் இல்லை என நசுருதீன் ஷா வேதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தான் இந்திப் படங்கள் பார்ப்பதை நிறுத்திவிட்டதாகவும் வேதனைத் தெரிவித்தார்.

மூத்த பாலிவுட் நடிகர்  நசுருதீன் ஷா
மூத்த பாலிவுட் நடிகர் நசுருதீன் ஷா

மூத்த பாலிவுட் நடிகர் நசுருதீன் ஷா இந்தி சினிமாவில் நடப்பு காலங்களில் ஒன்றுமே இல்லை என்று தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். மேலும் பணம் சம்பாதிக்கும் நோக்கமின்றி படங்கள் தயாரிக்கப்பட்டால் மட்டுமே இந்தி சினிமா நல்ல தரம் வாய்ந்த படங்களைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். 

டெல்லியில் உள்ள ஷாஜகானாபாத்தில் உள்ள மீர் கி டெல்லியில் பேசிய நசுருதீன், இந்தி திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடந்த 100 ஆண்டுகளாக ஒரே மாதிரியான படங்களை உருவாக்கி வருகின்றனர் என்றார்.

இதுதொடர்பாக 73 வயது பாலிவுட் நடிகர் நசுருதீன் ஷா கூறியதாவது, "இந்தி சினிமா 100 ஆண்டுகள் பழமையானது என்று சொல்வதில் நாம் பெருமைப்படுகிறோம். ஆனால், இந்தி சினிமாவினர், ஒரே மாதிரியான படங்களை மட்டுமே உருவாக்கி வருகின்றனர் என்பது தனக்கு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. நான் இந்தி படங்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். எனக்கு அவை பிடிக்கவில்லை.

உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் இந்தி திரைப்படங்களைப் பார்க்கச் செல்கிறார்கள். ஏனெனில் அது அவர்களின் வீட்டுடனான தொடர்பினைத் தருகிறது. ஆனால் விரைவில் எல்லோரும் சலிப்படைவார்கள்’’ என்று நசுருதீன் கூறினார்.

மேலும் அவர், "இந்துஸ்தானி உணவு எல்லா இடங்களிலும் விரும்பப்படுகிறது. ஏனென்றால் அதில் பொருள் உள்ளது. இந்தி படங்களில் என்ன சாராம்சம் இருக்கிறது? ஆம், அவர்கள் எல்லா இடங்களிலும் இந்திப் படங்கள் பார்க்கப்படுகிறது.  இந்திப் படங்கள் கவர்ச்சியானது. இந்திப் படங்கள் எவ்வளவு வண்ணமயமானது என்று சிலர் விமர்சிக்கின்றனர். மேலும் படத்தில் கான்செஃப்ட் இல்லாததால் அதைப் பார்ப்பவர்கள் விரைவில் சலிப்படைகின்றனர்" என்றார்.

மேலும் அவர் ’’சமூகத்தின் யதார்த்தத்தைக் காட்டுவது "நல்ல தயாரிப்பாளர்களின்" பொறுப்பு. இந்தி சினிமாவை பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறையாக பார்ப்பதை நிறுத்தினால் மட்டுமே நல்ல படங்கள் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டதாக உணர்கிறேன். இனி இதற்கு தீர்வு இல்லை. ஏனென்றால் ஆயிரக்கணக்கானோர் பார்க்கும் படங்கள் தொடர்ந்து தயாரிக்கப்படும். மக்கள் அவற்றை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். கடவுளுக்குத்தான் தெரியும் இது எப்போது முடியும் என்று.

எனவே நல்ல திரைப்படங்களை உருவாக்க விரும்புபவர்கள், இன்றைய யதார்த்தத்தைக் காட்டுவது அவர்களின் பொறுப்பு. அவர்களுக்கு அமலாக்கத்துறை அவர்களின் கதவுகளைத் தட்டாத வகையில் உள்ளது" என்று நசுருதீன் கூறினார்.

ஈரானிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் அதிகாரிகளின் அடக்குமுறையையும் மீறி நல்ல திரைப்படங்களை உருவாக்கினர் என்றும், அவசரநிலை நாட்களில்கூட இந்திய கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் கார்ட்டூன்களை உருவாக்கினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.