Thandel OTT: நாக சைதன்யாவின் 100+ கோடி வசூலித்த படம்.. ஓடிடியில் ரிலீஸாகும் தண்டேல்.. எங்கு? எப்போது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thandel Ott: நாக சைதன்யாவின் 100+ கோடி வசூலித்த படம்.. ஓடிடியில் ரிலீஸாகும் தண்டேல்.. எங்கு? எப்போது?

Thandel OTT: நாக சைதன்யாவின் 100+ கோடி வசூலித்த படம்.. ஓடிடியில் ரிலீஸாகும் தண்டேல்.. எங்கு? எப்போது?

Malavica Natarajan HT Tamil
Published Mar 03, 2025 07:13 AM IST

Thandel OTT: நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்த 'தண்டேல்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடியில் வெளியாக உள்ளது.

Thandel OTT: நாக சைதன்யாவின் 100+ கோடி வசூலித்த படம்.. ஓடிடியில் ரிலீஸாகும் தண்டேல்.. எங்கு? எப்போது?
Thandel OTT: நாக சைதன்யாவின் 100+ கோடி வசூலித்த படம்.. ஓடிடியில் ரிலீஸாகும் தண்டேல்.. எங்கு? எப்போது?

தண்டேல் ஓடிடி

இந்நிலையில், தண்டேல் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி நேற்று மார்ச் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் படி, மார்ச் 7 ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸில் இந்தப் படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இந்த தகவலை நெட்ஃபிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான போஸ்டரை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளது. 'தண்டேல்' படம் நெட்ஃபிளிக்ஸில் ஐந்து மொழிகளில் வெளியிடப்படும். தெலுங்குடன், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் எனக் கூறியுள்ளது.

100 கோடி வசூல்

'தண்டேல்' படத்தை சந்தூ மொண்டேட்டி இயக்கியுள்ளார். பிப்ரவரி 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. நாக சைதன்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமாக இது சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டின் தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்று. 'தண்டேல்' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அல்லு அர்விந்த் தயாரிப்பில் பன்னி வாசு இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

சைதன்யா, சாய் பல்லவி கெமிஸ்ட்ரி

மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, காதல், தேசபக்தி, ஆக்‌ஷன் காட்சிகளுடன் சந்தூ மொண்டேட்டி 'தண்டேல்' படத்தை உருவாக்கியுள்ளார். இந்த ரொமாண்டிக் படத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் நடிப்பும், அவர்களது இணையின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளன.

தண்டேல் கதை

ராஜு (நாக சைதன்யா), சத்யா (சாய் பல்லவி) இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள். நட்புடன் தொடங்கிய அவர்களின் பயணம் காதலாக மாறுகிறது. ராஜு மீன்பிடிக்கச் செல்வதற்காக ஆண்டில் ஒன்பது மாதங்கள் கடலில் இருப்பார். அந்த நேரத்தில் மீன்பிடிக்கச் சென்ற ராஜுக்கு என்ன நடக்கும் என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்து வாழ்ந்து வருகிறாள் சத்யா. தன் காதலியின் துன்பம், பயம் கண்டு ராஜு மீண்டும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மாட்டேன் என்று சத்யாவிடம் வாக்கு கொடுக்கிறான்.

ஆனால், சத்யாவிடம் கொடுத்த வாக்கை ராஜு மீறுகிறான். தனக்கு மீன்பிடிப்பு முக்கியம் என்று கடலுக்குச் செல்கிறான். அதன் பிறகு என்ன நடந்தது? மீன்பிடிக்கச் சென்ற ராஜு பாகிஸ்தான் கடலோரக் காவலர்களிடம் எப்படி சிக்கினான்? பாகிஸ்தான் சிறையில் ராஜுக்கு என்னென்ன துன்பங்கள் ஏற்பட்டன?

சத்யாவிடம் கொடுத்த வாக்கை ராஜு காப்பாற்ற முடியாததற்குக் காரணம் என்ன? ராஜு மீது கோபம் கொண்ட சத்யா வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏன் தயாராகிறாள்? ராஜு சிறையிலிருந்து விடுதலையானாரா? இல்லையா? என்பதுதான் 'தண்டேல்' படத்தின் கதை.

லவ் ஸ்டோரிக்குப் பிறகு

லவ் ஸ்டோரிக்குப் பிறகு நாக சைதன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்த படம் இது. 'தண்டேல்' படத்திற்கு முன்பு நாக சைதன்யாவுடன் சந்தூ மொண்டேட்டி 'சவ்யசாச்சி' என்ற படத்தை இயக்கியுள்ளார். 'தண்டேல்' படத்திற்குப் பிறகு விருபாஷ் இயக்குநர் கார்த்திக் வர்மாவுடன் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க உள்ளார் நாக சைதன்யா. சுகுமார் ரைட்டிங்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்திரா நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.