'சூர்யா 45 படத்தில் ஒரு ஃபேன் பாய் சம்பவம் இருக்கும்.. பிஜிஎம் மாஸாக இருக்கும்'- சாய் அபயங்கர்
சூர்யா 45 படத்தின் இசை மாஸாக வந்து கொண்டிருக்கிறது. இதில் நிச்சயம் ஃபேன் பாய் சம்பவம் இருக்கும் என இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கூறியுள்ளார்.

சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் இந்த 45வது படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான பூஜை கோவை மாவட்டம் மாசாணி அம்மன் கோவிலில் நடந்தது. பின், படப்பிடிப்பு வேகமெடுத்த நிலையில், தற்போது சூர்யா 45 படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சூர்யா 45 படத்தின் இசை எப்படி வந்திருக்கிறது என்பது குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியுள்ளார்.
சூர்யா 45 சூப்பரா போயிட்டு இருக்கு
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாய் அபயங்கர், "சூர்யா 45 படம் சூப்பரா போயிட்டு இருக்கு. எல்லாமே சூப்பரா போயிட்டு இருக்கு. நான் படம் பாக்குறதுக்கு முன்னாடியே என் மனசுல படம் பத்தி எந்த மாதிரி யோசனை வருதோ அதை எல்லாம் யோசிச்சு தனியா மியூசிக் கம்போஸ் பண்ணிடுவேன். அப்புறம் அது எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி வைப்பேன்.