'மவுண்ட் பேட்டன் பிரபு காலத்துல இருந்து பாத்தாலும் மோடி மாதிரி தலைவர் யாரும் இல்ல'- இளையராஜா புகழாரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'மவுண்ட் பேட்டன் பிரபு காலத்துல இருந்து பாத்தாலும் மோடி மாதிரி தலைவர் யாரும் இல்ல'- இளையராஜா புகழாரம்

'மவுண்ட் பேட்டன் பிரபு காலத்துல இருந்து பாத்தாலும் மோடி மாதிரி தலைவர் யாரும் இல்ல'- இளையராஜா புகழாரம்

Malavica Natarajan HT Tamil
Published Apr 27, 2025 07:37 PM IST

மவுண்ட் பேட்டன் காலத்தில் இருந்து ஆட்சி செய்தவர்களைப் பற்றி பட்டியல் எடுத்தால் தான் மோடி செய்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும் என இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார்.

'மவுண்ட் பேட்டன் பிரபு காலத்துல இருந்து பாத்தாலும் மோடி மாதிரி தலைவர் யாரும் இல்ல'- இளையராஜா புகழாரம்
'மவுண்ட் பேட்டன் பிரபு காலத்துல இருந்து பாத்தாலும் மோடி மாதிரி தலைவர் யாரும் இல்ல'- இளையராஜா புகழாரம்

அவரால் தான் விருது

2018 ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதைப் பெற்ற பிறகு தான் எப்படி உணர்ந்தேன் என்பதை இளையராஜா பகிர்ந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியுடனான தனது சுருக்கமான உரையாடலை இசைஞானி இளையராஜா நினைவு கூர்ந்தார். எங்கள் பிரதமரால் தான் எனக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது. அவர் என்னிடம் மிகவும் அன்பாக இருக்கிறார் என்றார்.

20 ஆண்டு ஆள வேண்டும்

என் மனதில் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை. இது ஒரு அற்புதமான விஷயம். விருது வழங்கும் விழா முடிந்ததும் தேநீர் விருந்து நடந்தது. அங்குதான் அவரை சந்தித்தேன். அப்போது நான் அவரிடம் சொன்னேன், 'ஐயா, நான் உங்களுக்காக ஒரு பிரார்த்தனை செய்ய வேண்டும். நீங்கள் இன்னும் 20 ஆண்டுகள் இந்தியாவை ஆள வேண்டும் என்றேன். அது இப்போது நடக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் மோடி குறித்து இளையராஜா கருத்து

பிரதமர் மோடி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது குறித்த தொகுப்பாளரின் கேள்விக்கு அவரது கருத்து குறித்து கேட்டபோது, இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த அனைத்து பிரதமர்களின் பெயர்களையும் எழுதி ஒப்பிட்டுப் பாருங்கள் என்று நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் கேட்டார். காசி விஸ்வநாதர் கோயிலையும் கங்கையையும் பிரதமர் மோடி எவ்வாறு மாற்றினார் என்று இளையராஜா கூறினார்.

நாட்டை நேசிப்பவர்

இதுகுறித்து பேசிய இளையராஜா, நான் முதல் முதலில் 1988 ஆம் ஆண்டு காசிக்கு சென்றேன். அந்த புனிதமான இடத்தில் மக்கள் எல்லாம் அசிங்கம் செய்து வைத்து வந்தனர். மக்கள் கங்கையை அசுத்தம் செய்தனர். ஆனால், எந்த பிரதமரும் செய்யாத ஒரு விஷயத்தை சரியான திட்டமிடலுடன் மோடி செய்தார். அவர் பிரதமராக வந்த பிறகு தான் கங்கையும் காசியும் சுத்தமாக மாறியது. அந்தப் பணிகள் இன்னும் முடியவில்லை. உண்மையாக நாட்டை நேசிப்பவர்களால் மட்டுமே இதுபோன்ற பணிகளை செய்ய முடியும் என்றும் பெருமையாக கூறினார்.

மோடி பற்றி இதுதான் கருத்து

மேலும் பேசிய அவர், "நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன், மோடி எங்களுக்கு வேண்டாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவருக்கு பதில் வேறு யாரை தலைவராக கூறுவீர்கள்? நீங்கள் குறிப்பிடும் மற்ற தலைவர் அல்லது பத்து தலைவர்களை அனைத்து இந்திய மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி யாராவது இருக்காங்களா? இதுதான் அவரைப் பற்றிய என் கருத்து" என்றார்.

பட்டியல் போட்டால் தெரியும்

மேலும், மவுண்ட்பேட்டன் காலம் முதல் இந்தியாவை ஆட்சி செய்த அனைத்து பிரதமர்களும் நாட்டிற்கு என்ன செய்துள்ளனர் என்றும் ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் பிரதமர் மோடிக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று புரியும் என இளையராஜா கருத்து தெரிவித்தார்.

சிம்பொனி இசைக் கச்சேரி குறித்து கலந்துரையாடல்

கடந்த மாதம் பிரதமர் மோடி இளையராஜாவை சந்தித்து, தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான வேலியன்ட்டை லண்டனில் வழங்கி வரலாறு படைத்தார் என்று கூறினார்.

பின், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இசை ஜாம்பவானான மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எல்லா வகையிலும் ஒரு முன்னோடி மற்றும் சில நாட்களுக்கு முன்பு லண்டனில் தனது முதல் மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனியான வேலியன்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்தார்.