Ilaiayaraaja: ப்ரஷ்ஷா இருக்கு ஜி.. உற்சாகத்தில் திளைத்த இளையராஜா வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்..
Ilaiayaraaja: இசையமைப்பாளர் இளையராஜா தனது கச்சேரிகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்த பின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு மக்களை குஷியாக்கி உள்ளார்.

Ilaiayaraaja: தமிழ் சினிமாவை இத்தனை ஆண்டு காலம் ஆகியும் தன் இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இவரது இசையும் குரலும் நம்மை எந்த எல்லைக்கும் கூட்டிச் செல்லும். அது அழுகையாக இருந்தாலும் சரி, கோவமாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, காமமாக இருந்தாலும் சரி. அத்தனையும் தன் இசைக்குள் கட்டி வைத்து வித்தை காட்டி வருகிறார்.
சாதனைக்கு சொந்தக் காரர்
தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்தவர், சொந்தமாக இசைக் குறிப்புகள் எழுதத் தெரிந்தவர் என எத்தனை எத்தனை சாதனைகளை செய்திருக்கிறார். இவரின் இசை செய்யும் மந்திரத்தை அறிந்தவர்கள் இவரை மேஸ்ட்ரோ என்றும் இசைஞானி என்றும் இசை புத்தர் என்றும், இசை அரசர் என்றும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்ரனர்,
என்னதான் இவரைச் சுற்றி பல வதந்திகளும் பிரச்சனைகளும் வந்தாலும் இவரை நாளுக்கு நாள் கொண்டாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது.
இசைக் கச்சேரிகளில் ஆர்வம்
ஒரு வருடத்தில் 40 படங்களுக்கு மேல் இசையமைத்து வந்த இளையராஜா, தற்போது பல இசையமைப்பாளர்களின் வருகையினால், தனித்துவமான, தன் மனதிற்கு விருப்பமான படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீப காலமாக அவர் இசைக் கச்சேரிகள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் தனது இசைக் கச்சேரிகளை நடத்திவந்த இவர், சமீப காலமாக மற்ற மாவட்டங்களிலும் தனது இசைக் கச்சேரிகளை நடத்த முடிவு செய்தார்.
மனதை கவர்ந்த நெல்லைக் கச்சேரி
முன்னதாக திருநெல்வேலியில் மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் அனைவரும் இளையராஜாவின் இசையைக் கேட்டு ஆர்பரித்தனர். இது இளையராஜாவின் மனதிற்கு மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்தது.
இதுகுறித்து இளையராஜாவே அவரது ட்விட்டர் பக்கத்தில் சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது!
நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..?" என்றும் கேட்டுள்ளார்.
ஆவலோடு காத்திருப்பு
மேலும் மற்றொரு பதிவில், "சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்... உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்! தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்." என்றும் கூறியுள்ளார்.
இதைக் கேட்ட இளையராஜாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். திருநெல்வேலியில் நடைபெற்ற இசைக் கச்சேரியைப் பார்க்க பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்ததால், அந்தப் பகுதியே போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது. காரணம், இசைக்கு அறிமுகம் தேவையில்லாத மனிதராக இருக்கும் இளையராஜாவை தூரத்திலிருந்தாவது பார்த்துவிட முடியாத என்ற ஏக்கத்தில் தான்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்