G.V. Prakash: “எனக்கு உத்வேகமே இவர்கள் தான்.. எல்லாம் அனுபவம் தந்தது..” மனம் திறக்கும் ஜிவி பிரகாஷ்..
G.V. Prakash: இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை கேட்டு வளர்ந்தவன் நான். அவர்களின் பாடல்கள் தான் எனக்கு உத்வேகம் அளிக்கிறது என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.

G.V. Prakash: “எனக்கு உத்வேகமே இவர்கள் தான்.. எல்லாம் அனுபவம் தந்தது..” மனம் திறக்கும் ஜிவி பிரகாஷ்..
G.V. Prakash: இன்றைய காலகட்டத்தில் ஒரு வயது குழந்தை தொடங்கி பருவம் வந்தவர்கள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.
சாதனை மேல் சாதனை
17 வயதில் தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக களம் இறங்கிய இவர், இன்று 100 படங்களுக்கு இசையமைத்துள்ளார், 25 படங்களில் நடித்துள்ளார் என தன் சாதனைகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார். இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், தனது இசை தொழில், உத்வேகம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.