Music director Deva: ‘ ரெக்க கட்டி பறக்குதடி..10 நிமிடத்தில் கம்போசிங்க முடிச்சேன்; 3 மணிக்கு பாட்டு ரெடி!' -தேவா பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Music Director Deva: ‘ ரெக்க கட்டி பறக்குதடி..10 நிமிடத்தில் கம்போசிங்க முடிச்சேன்; 3 மணிக்கு பாட்டு ரெடி!' -தேவா பேட்டி

Music director Deva: ‘ ரெக்க கட்டி பறக்குதடி..10 நிமிடத்தில் கம்போசிங்க முடிச்சேன்; 3 மணிக்கு பாட்டு ரெடி!' -தேவா பேட்டி

Kalyani Pandiyan S HT Tamil
Feb 04, 2025 06:30 AM IST

Music director Deva: அடுத்த நாள் காலை 7 மணிக்கு நான், வைரமுத்து மற்றும் சுரேஷ்கிருஷ்ணா ஆகியோர் ரெடியாக ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆர்க்கெஸ்ட்ரா வருவதற்கு காத்திருந்தோம். என்ன பாடல், என்ன வகையான ஜானர் உள்ளிட்ட எதுவும் தெரியாது. - இசையமைப்பாளர் தேவா பேட்டி!

Music director Deva: ‘ ரெக்க கட்டி பறக்குதடி..10 நிமிடத்தில் கம்போஸிங்க முடிச்சேன்; 3 மணிக்கு பாட்டு ரெடி! - தேவா பேட்டி
Music director Deva: ‘ ரெக்க கட்டி பறக்குதடி..10 நிமிடத்தில் கம்போஸிங்க முடிச்சேன்; 3 மணிக்கு பாட்டு ரெடி! - தேவா பேட்டி

தயக்கம் உண்டு

அதில் அவர் பேசும் போது, ‘என்னை ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அமர்த்துவதற்கு ரஜினிகாந்த் சாருக்கு நிச்சயமாக தயக்கம் இருந்திருக்கும். காரணம் என்னவென்றால், ஒரு இசையமைப்பாளர் தொடர்ச்சியாக நிறைய திரைப்படங்கள் செய்து கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது, திடீரென்று ஒரு புது இசையமைப்பாளருக்கு ஒரு பெரிய படத்தை கொடுக்கும் பொழுது, அந்த தயக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.

ரசிகர்கள் என்னை மிரட்டினார்கள்

அந்த சமயத்தில் நிறைய சம்பவங்கள் நடந்தன. ரஜினிகாந்தினுடைய ரசிகர்களே என்னை மிரட்டவும் செய்தார்கள். காரணம், அவர்களுக்கு ரஜினிகாந்த் பட பாடல்கள் நன்றாக வர வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. ஆனால் படம் ரிலீஸ் ஆன பின்னர் அதே ரசிகர்கள் என்னை தலைமீது தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

என்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் வெறித்தனமாக இசையமைத்த திரைப்படம் என்றால் அது அண்ணாமலை தான். அந்தப் படத்தில் நான் இசை அமைத்திருந்த எல்லா பாடல்களும் முதல் டியூனிலே ஓகே செய்தவை. அந்தப் படத்தில் ‘ரெக்க கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்’ என்ற பாடல் வரும். அந்தப்பாடல் உருவான கதையை சொல்கிறேன்.

3 மணிக்கு பாட்டு ரெடி

ஒரு நாள் பாலச்சந்தர் எனக்கு போன் செய்கிறார். அடுத்த நாள் 3 மணிக்கு குஷ்பு, ரஜினி கால்ஷீட் இருக்கிறது; ஒரு டூயட் பாட்டை கட்டாயம் எடுக்க வேண்டும்; நீ ஒரு பாட்டை கம்போஸ் செய்து கொடு என்று சொன்னார். நான் உடனே, சார் ரஜினி சார் படம்… உங்களது தயாரிப்பு நிறுவனம், சுரேஷ் கிருஷ்ணா டைரக்‌ஷன்… இப்படிப்பட்ட பட பாடலுக்கு ஒரு நாள் கொடுத்தீர்கள் என்றால் எப்படி சார் என்று கேட்டேன்; அவர் அதற்கு தேவா உன்னைப்பற்றி உனக்கு தெரியாது. உன்னால் முடியும் என்றார். அடுத்த நாள் காலை 7 மணிக்கு நான், வைரமுத்து மற்றும் சுரேஷ்கிருஷ்ணா ஆகியோர் ரெடியாக ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆர்க்கெஸ்ட்ரா வருவதற்கு காத்திருந்தோம். என்ன பாடல், என்ன வகையான ஜானர் உள்ளிட்ட எதுவும் தெரியாது.

நான் எல்லா இசைக்கருவிகளையும் வரவைத்து விட்டேன். ஏழு மணிக்கு இசையமைக்க உட்கார்ந்தோம்; 7.10 ற்கு கம்போசிங் முடித்து விட்டேன். அதன் பின்னர் 2 மணி அளவில் சித்ராவும், எஸ்பிபியும் ஸ்டுடியோக்கு வந்தார்கள். ஒரு மணி நேரத்தில் பாட்டை முடித்தோம். 3 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு பாடல் சென்றுவிட்டது. நான் பாடலை முடித்தேனா.., முடிக்கவில்லையா என்பது பாலச்சந்தர் சாருக்கு தெரியாது. ஆனால் அவர் என்னை பார்க்க வரும் பொழுது தங்க பிரேஸ்லெட்டுடன் வந்தார்.’ என்று (கலாட்டாயூடியூப் ) அதில் அவர் பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.