Music Director D.Imman: பிறந்த நாளில் பாடம் புகட்டிய டி.இமான்.. வாய் அடைத்துப் போன ரசிகர்கள்!
Music Director D.Imman: இசையமைப்பாளர் டி.இமான் தனது பிறந்த நாளன்று தன் முழு உடல் உறுப்புகளையும் தானம் செய்துள்ளார்.

Music Director D.Imman: நடிகர் விஜய்யின் தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றார். கிராமத்து கதைகளுக்கு இவர் தரும் முக்கியத்தும் மக்கள் மத்தியில் இவரை மேலும் பிரபலமாக்கியது.
இவர், இசைத் துறையிலும் பல்வேறு திறமையான கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்து பலருக்கும் வாழ்க்கை அளித்துள்ளார். அத்துடன் இவர் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
உடல் உறுப்பு தானம்
இந்நிலையில், டி. இமான் நேற்று அவரது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது அவர் தன் உடலை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்துள்ளார். இதனை அவர் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.
அன்புக்கு நன்றி
அந்தப் பதிவில், " எனது பிறந்தநாளில் உங்கள் நிபந்தனையற்ற அன்புக்காக அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாளில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் முழு உடல் உறுப்பு தானத்திற்காக என்னைப் பதிவு செய்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் பதிவுடன் யூடியூப் வீடியோ லிங்க் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
உயிரிழந்தும் பயன்படுவேன்
அந்த வீடியோவில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், தனது இந்த செயல், மற்றவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும் என நம்புகிறேன்.
நான் என் முழு உடலையும் தானமாக அளித்து அதற்கான டோனர் கார்டையும் பெற்றுள்ளேன். என் உடல் நான் உயிரிழந்த பிறகும் யாரோ ஒருவருக்கு பயன்படும் என்றால் சந்தோஷம் தான். நாம் இறந்த பிறகும் ஜீவிக்கலாம் என்ற அற்புதமான விஷயத்திற்கு இந்த செயல் வழிவகுக்கும் என்றார்.
உடல் உறுப்பு தானத்தின் வழிமுறை
மேலும், அவர் உடல் தானம் செய்யப்பட்ட பின் செய்ய வேண்டியது என்ன? என்னென்ன வழிமுறைகளை செய்ய வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். அத்துடன் நிறைய பேர் இன்னும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் கூறினார்.
முன்னதாக, தன் முதல் மனைவி மோனிகாவை இமான் பிறந்த நிலையில் அவர் பல விமர்சனங்களுக்கு உள்ளானர். இதைத் தொடர்ந்து அவர் உபால்டு என்பவரை திருமணம் செய்து கொண்டு, அவருடன் இணைந்து பல பொது சேவைகளை செய்து வருகிறார்.
குழந்தை தத்தெடுப்பு
முன்னதாக, இமானும் உபால்டும் இணைந்து கண் பார்வையற்ற தம்பதியின் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். மேலும், இவர் சமூக சேவைகளுடன், இசைத் துறையிலும் பல்வேறு திறமையான கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்து பலருக்கும் வாழ்க்கை அளித்துள்ளார். இதனால் அவர் குறித்து சமூகத்தில் பல நல்ல அடையாளங்களும் உள்ளது. அதனுடன் இணைந்து தற்போது இந்த பெண் குழந்தை தத்தெடுப்பு சம்பவமமும் கலந்துகொண்டுள்ளது.
சூப்பர் சிங்கரிலும் சம்பவம்
அதுமட்டுமின்றி, இப்போது இவர் விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக வந்துள்ளார். இவர் வந்த பிறகு அங்கு பாட்டு பாட வந்த குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் தேவையான நிதி உதவி, பொருட்கள், மருத்து உதவிகளை செய்து பலரது மனங்களிலும் இடம் பிடித்து வருகிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்