'சில பாடல்கள் அருவருப்பாக உள்ளது.. இது விஷத்தை ஆக்ஸிஜனோடு சுவாசிப்பது போன்றது'- உணர்ச்சிவசப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்
ஏஐ தொழில்நுட்பத்தை தவறான முறையில் அதிகமாகப் பயன்படுத்துவது விஷத்தை ஆக்ஸிஜனுடன் கலந்து சுவாசிப்பது போன்றது என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

'சில பாடல்கள் அருவருப்பாக உள்ளது.. இது விஷத்தை ஆக்ஸிஜனோடு சுவாசிப்பது போன்றது'- உணர்ச்சிவசப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான்
நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிறி எழுடா’ என்ற பாடலில், இறந்துபோன இரண்டு பாடகர்களான பம்பா பக்யா மற்றும் சாஹுல் ஹமீது ஆகியோரின் குரல்களை செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் உருவாக்கினார். இது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஏஐ பயன்பாடு
இந்த நிலையில், இசை உருவாக்கத்தில் ஏஐ பயன்பாடு குறித்து அவர் என்ன நினைக்கிறார்? என்பது குறித்து பிடிஐயிடம் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், இதன் பயன்பாடு ‘கட்டுப்பாட்டுடன்’ இருக்க வேண்டும், இல்லையெனில் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று ரஹ்மான் கூறினார். (இசையில் ஏஐ பயன்பாடு குறித்த ரஹ்மானின் விளக்கம்)