திரும்ப பெறப்பட்ட வழக்கு.. சிம்புவுக்கு ரூ. 1 கோடி வட்டியுடன் திருப்பி தர நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய ரூ. 1 கோடியை வட்டியுடன் திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திரும்பு பெறப்பட்ட வழக்கு.. சிம்புவுக்கு ரூ. 1 கோடி வட்டியுடன் திருப்பி தர நீதிமன்றம் உத்தரவு
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரித்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு ரூ. 9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டு, ரூ. 4.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டது.
ஆனால் சிம்பு சொன்னபடி அந்த படத்தில் நடிக்கவில்லை என கூறப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரூ. 1 கோடிக்கான உத்தரவாதத்தை நடிகர் சிம்பு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
சிம்பு தரப்பில் கோரிக்கை
இந்த வழக்கில் நடிகர் சிம்பு மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் பட நிறுவனத்துக்கு இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.