MGR : தாலி எடுத்து தர மறுத்த எம்ஜிஆர்.. தலைவரே நான் போய் உங்கள தப்பா நினைச்சுட்டனே..கதறிய அழுத இடிச்ச புளி செல்வராஜ்!
எம்ஜிஆரிடம் தாலி எடுத்துக்கொடுக்க அவரோ தன் அண்ணன் அண்ணியிடம் தாலியை கொடுக்கிறார். இது திருமண கோலத்தில் இருந்த இடிச்ச புளி செல்வராஜ்க்கு பெருத்த ஏமாற்றம் தந்தது.

தமிழ்நாடு அரசியலையும், தமிழ் சினிமாவும் எம்ஜிஆர் என்ற அந்த மனிதனை பிரித்து விட்டு இன்று வரை பார்க்க முடியாது என்பதே நிதர்சனம். அவரால் உதவி பெற்றவர்கள் ஏராளம், ஒருவர் செய்த உதவி அவர் இறந்த பிறகும் வாழும் என்பதற்கு எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய உதாரணமாகும். அதனால் தான் இன்று வரை அவர் மக்கள் திலகம் என அழைக்கப்பட்டு வருகிறார். நடிகர் எம்ஜிஆரின் 108ஆவது பிறந்த நாள் இன்று. இந்நிலையில் தன்னை நம்பி வந்தவர்களை எப்போதும் ஆதரித்த எம்ஜிஆர் தன்னுடன் சுமார் 40 ஆண்டுகள் பயணித்த இடிச்சபுளி செல்வராஜை கதறி அழுக வைத்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இதுகுறித்து சினிமா பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தனது VK Sundar Updates என்ற யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது,
"புரட்சி தலைவர் எம்ஜிஆரிடம் குறிப்பிடும் படியான ஒரு பழக்கம் இருந்தது. அது என்ன வென்றால் யாராவது ஒரு திருமண அழைப்பிதழை கொண்டு வந்து தந்தால் உடனே டேட் கொடுக்க மாட்டார். அதை வாங்கி வைத்து கொண்டு ஏதோ ஒரு காரணம் சொல்லி அவர்களை அனுப்பி விடுவார். பின்னர் தனது அண்ணன் எம்ஜி சக்கரபாணியிடம் சென்று அந்த தேதியில் நீங்க ஃபிரியா இருக்கீங்களா என்று கேட்பார். சக்கர பாணி அந்த தேதியில் பிசியாக இருந்தால் அந்த திருமணத்திற்கு தேதி தருவதை மறுத்துவிடுவார்.
அந்த வகையில் உதவி இயக்குநரும், நடிகருமான இடிச்ச புளி செல்வராஜ் எம்ஜிஆருடன் நீண்ட காலம் இருந்தார். அவர் தனது திருமணத்திற்கு பத்திரிக்கை தருகிறார். அப்போது வழக்கம் போல் எம்ஜிஆர், இல்ல.. செல்லவராஜ் எனக்கு வேலை இருக்கிறது.. நான் சொல்கிறோன் என்கிறார். இது இடிச்ச புளி செல்வராஜிற்கு பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன தலைவர் இப்படி சொல்லிட்டாரே என வருத்தப்படுகிறார்.