Marumagal: திருமண அவசரத்தில் தந்தை.. கெடுக்க நினைக்கும் தாய் - ஆதிரை, பிரபு திருமணம் நடக்குமா?
Marumagal: ஆதிரையின் சித்தி அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம் என நினைக்கிறார். ஆனால் அதற்கு ஆதிரை, “ இப்போ நான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால், அப்பாவின் மனசு ரொம்ப கஷ்டப்படும் அம்மா. அப்பாவை தேவதனை செய்ய வைக்க என்னால் முடியாது ” என சொல்லிவிட்டார்.

திருமண அவசரத்தில் தந்தை.. கெடுக்க நினைக்கும் தாய் - ஆதிரை, பிரபு திருமணம் நடக்குமா?
Marumagal: சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர், மருமகள். இந்த சீரியலில் இன்றைய எபிசோடிற்கான( ஆகஸ்ட் 13 ) ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இன்றைய ப்ரோமோ
ஆதிரையின் சித்தி அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம் என நினைக்கிறார். ஆனால் அதற்கு ஆதிரை, “ இப்போ நான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால், அப்பாவின் மனசு ரொம்ப கஷ்டப்படும் அம்மா. அப்பாவை தேவதனை செய்ய வைக்க என்னால் முடியாது ” என சொல்லிவிட்டார்.
வேதவள்ளி, பிரபுவிற்கு பெண் பார்த்து இருக்கும் விஷயத்தை தந்தையிடம் சொல்லிவிட்டார். அதற்கு அவர், “ இதற்கு எல்லாம் காரணம் உங்க அம்மா தானா? “ என கேட்க உடபே வேதவள்ளி, ஆமாம் அப்பா எல்லாவற்றிருக்கும் அம்மா தான் காரணம் என்று ஏத்திவிட்டார். அத்துடன் இன்றைய நாளிற்கான ப்ரோமோ முடிந்தது.