மருமகள் சீரியல் மார்ச் 6 எபிசோட்: மனைவி கொட்டத்தை அடக்க சிவப்பிரகாசம் போடும் ஸ்கெட்ச்.. பிரபுவுக்கு ஆதிரை விட்ட சவால்!
மருமகள் சீரியல் மார்ச் 6 எபிசோட்:

மருமகள் சீரியல் மார்ச் 6 எபிசோட்: மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், தான் எதற்காக இவ்வளவு கஞ்சனாக இருக்கிறேன் என்பதை பிரபு ஆதிரையிடம் கூறிய நிலையில், அவள் உங்கள் ஆசைக்காக நான் பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்திக்காட்டுகிறேன் என்று சவால் விட்டாள். இன்னொரு பக்கம், சிவப்பிரகாசம் தன்னுடைய மனைவியின் கொட்டத்தை அடக்க ப்ளான் போடுகிறார்.’ இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன.
மருமகள் சீரியலில் நேற்று நடந்தது என்ன?
மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடில், ஆதிரையும் பிரபுவும் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில், பைக் ரிப்பேர் ஆகி நின்றது. இந்த நிலையில் கார்த்திக் அங்கு வந்து பைக்கை ரிப்பேர் செய்து கொடுத்தான். தம்பிதானே என்று பிரபு காசு கொடுக்காமல் கிளம்ப, அதை குத்திக்காட்டி பேசினான் கார்த்திக்.
இந்த நிலையில் பிரபு பணத்தைக்கொடுத்தான். தொடர்ந்து, பிரபுவும், ஆதிரையும் கோயிலுக்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த சாமியார் ஒருவர், ஆதிரையை நோக்கி, இதுவரை நீ சந்தித்த பிரச்சினைகளெல்லாம் பிரச்சனைகளே இல்லை. இனிமேல் நீ சந்திக்க போகும் பிரச்சனைகள் தான் என்றார்.
அத்துடன் நீ புகுந்த வீட்டிலும், பிறந்த வீட்டிலும் பணத்தால் அல்லோல் பட போகிறாய் என்று எச்சரித்தார். ஆனால் இவை அனைத்தும் உன்னுடைய நன்மைக்காகவே நடக்கிறது. தைரியமாக போராடு என்று கூறி அனுப்பி வைத்தார். இதை கேட்டு அதிர்ச்சியுற்ற அவள், வீட்டிற்கு வந்து சிவப்பிரகாசத்தின் போட்டோவை பார்த்து சாமியார் சொன்னதைச் சொல்லி, கண்ணீர் விட்டு கதறி அழுதாள்.
அடுத்த நாள் காலையில் ஆதிரை பிரபுவுக்கு பாதாம் பால் கொண்டு கொடுக்க, பிரபு கடந்த மாதம் கொடுத்த 15,000 ரூபாய்க்கு கணக்கை கேட்டான். இந்த நிலையில் நீங்கள் ஏன் இப்படி பட்ஜெட் போட்டு வாழ்கிறீர்கள் என்று ஆதிரை கேட்க, தனக்கான கனவு இல்லத்தை கட்டுவதற்காகவே தான் இப்படி பணத்தை சேமித்து வருவதை பிரபு ஒத்துக் கொண்டான்.
அவனின் ஆசைக்கு உறுதுணையாக இருப்பேன் என்று கூறிய ஆதிரை, இருப்பினும் தனக்கு மாதம் கொடுக்கும் பணம் போதாது என்றாள். அத்துடன் நேற்றைய எபிசோடு நிறைவடைந்தது.

டாபிக்ஸ்