மருமகள் தமிழ் சீரியல் மார்ச் 03 எபிசோட் அப்டேட்: களேபரம் செய்யும் கார்த்திக்.. அதிர்ச்சியில் ஆதிரை.. கொதித்த பிரபு!
மருமகள் தமிழ் சீரியல் மார்ச் 03 எபிசோட் அப்டேட்: திருட்டு பையனுக்கு வீட்டில் இடமில்லை என்றால், கொலையாளிக்கு மட்டும் இடம் இருக்கிறதா என்று குத்திக் கட்டி பேச, பொறுமையிழந்த பிரபு, அவனை கழுத்தைப் பிடித்து வெளியே துரத்தினான்

மருமகள் தமிழ் சீரியல் மார்ச் 03 எபிசோட் அப்டேட்: மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், ஆதிரையும், பிரபுவும் ஒரு வழியாக எஸ் பி மகனை கொன்ற வழக்கில் இருந்து விடுதலையாகி வர அவர்களுக்கு மணிமேகலை ஆரத்தி எடுத்தாள்.
இதற்கிடையே, பிரபுவின் தம்பியான கார்த்திக் வீட்டிற்குள் வந்தான். வந்ததோடு மட்டுமல்லாமல், ஆதிரையிடம் நீங்கள் யாரை கொலை செய்தீர்கள், எதற்காக கொலை செய்தீர்கள் போன்ற கேள்விகளை கேட்டு துளைத்தான்.
இதைக் கேட்ட பிரபு, ஆத்திரமடைந்து உன் வேலையை பாரு என்று சொல்ல, அவன் மீண்டும் மீண்டும் அதையே பேசிக்கொண்டிருந்தான். இதைக்கேட்ட பிரபு டென்ஷன் ஆகிவிட்டான்.
இந்த நிலையில் திருட்டு பையனுக்கு வீட்டில் இடமில்லை என்றால், கொலையாளிக்கு மட்டும் இடம் இருக்கிறதா என்று குத்திக் கட்டி பேச, பொறுமையிழந்த பிரபு, அவனை கழுத்தைப் பிடித்து வெளியே துரத்தினான்.’ இது தொடர்பான நிகழ்வுகள் மருமகள் சீரியலில் இடம்பெற்று இருக்கின்றன.
நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?
மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடில், பிரபுவும் ஆதிரையும் வழக்கிலிருந்து விடுபட்டு இருப்பதை இரு வீட்டாருக்கும் சொன்ன நிலையில், அவர்கள் மன நிம்மதி அடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் சிவப்பிரகாசம் வீட்டிற்கு வர, மணிமேகலை அவர்களுக்கு கண் திருஷ்டிக்காக வரமிளகாயை வைத்து சுற்றி போட்டாள். இதற்கிடையே தமிழரசி ஆதிரை வீட்டிற்குள்ளே வர விடக்கூடாது என்ற திட்டமிட்டு, கார்த்திகை அங்கு பிரச்சினை செய்ய வரவழைத்தான்.
தாமதமாக வந்த கார்த்திக்
ஆனால், கார்த்திக் வருவதற்கு தாமதமாக, இவர்கள் வீட்டிற்குள்ளையே வந்து அவர்கள் ரூமிற்கே சென்று விட்டனர். ரூமிற்குள் சென்ற பிரபு ஹனிமூன் என்பது ஒரு தம்பதிக்கு மறக்க முடியாத நினைவாக இருக்கும். ஆனால், இந்த நினைவு நமக்கு அப்படி இல்லை ஒவ்வொரு முறை நாம் நம்முடைய ஹனிமூன் பற்றி நினைக்கும் பொழுது, இந்த சம்பவம்தான் மீண்டும் மீண்டும் வந்து நம்மை கஷ்டப்படுத்தும் என்றான்.
இதைக்கேட்டு ஆதிரை, நிச்சயமாக இல்லை; இதுவும் எனக்கு ஒரு நல்ல நினைவு தான் என்றாள். இதை கேட்டு சற்று அதிர்ச்சியாக ஆதிரையை பார்த்தான் பிரபு.. அப்போது ஆதிரை சந்தோஷத்தில் கிடைக்கக்கூடிய அன்பு கல்யாண வீட்டு சாப்பாடு போல, ஆனால் கஷ்டத்தில் கிடைக்கக்கூடிய அன்பு கோயில் பிரசாதம் போல, அப்படியான அன்பு தான் இப்போது எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த பிரச்சினையின் போது நீங்கள் என் மீது எவ்வளவு அன்பு,அக்கறை வைத்திருக்கிறீர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். நீங்கள் எந்த அளவுக்கு என்னை காதலிக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டேன் ஆகையால் இதுவும் எனக்கு நல்ல நினைவு தான் என்றாள். இத்தோடு நேற்றைய எபிசோடு நிறைவடைந்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்