மருமகள் சீரியல் மார்ச் 01 எபிசோட்: ரிலீஸிற்கு பின் ரொமான்ஸ்.. ஆதிரைக்கு கடவுளாக மாறிய டிஜிபி.. மருமகள் சீரியல்..
மருமகள் சீரியல் மார்ச் 01 எபிசோட்: ஆதிரை மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் டிஜிபி பொய் என நிரூபித்ததால், ஆதிரை ரிலீஸ் செய்யப்பட்டார்.

மருமகள் சீரியல் மார்ச் 01 எபிசோட்: மருமகள் சீரியலில், பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஆதிரையும் பிரபுவும் ஏற்காட்டிற்கு ஹினிமூன் சென்றனர். அங்கு, வேல் விழி பிரபுவை கொல்ல திட்டமிட அதிலிருந்து தப்பித்து அவர்கள் கொஞ்சம் சந்தோஷமாக இருக்க முயன்றனர்.
நவீன் மரணம்
அந்த சமயத்தில், ஏற்காடு இன்ஸ்பெக்டர் மகன் நவீன், ஆதிரையை ஃபாலோ செய்து அவளை சீண்டி, தவறாக நடக்க முயன்றுள்ளான். அவனிடமிருந்து தப்பிக்க நினைத்து ஓடியபோது, ஆதிரை அவனை தள்ளி விட்டாள். இதில் கீழே விழுந்த நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
ஜெயிலில் ஆதிரை
தான் ஆசை ஆசையாய் வளர்த்த ஒரே மகனை பறிகொடுத்த இன்ஸ்பெக்டர் ஆதிரை மேல் மொத்த குற்றத்தையும் சுமத்தி, அவளை ஜெயிலில் அடைத்தான். பின் அவளை விசாரணை என்ற பெயரில் அடித்து கொடுமைபடுத்தினான். அத்தோடு ஆதிரையை ஜெயிலில் பார்க்க பிரபுவை அனுமதிக்கவும் இல்லை.
உதவிய டிஜிபி
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க வந்த டிஜிபி, நவீனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி, ஆதிரை குற்றமற்றவள் என நிரூபித்தாள். அத்துடன் ஆதிரையை இதை எல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்துவிட்டு சந்தோஷமாக இருக்குமாறும் கூறினாள்.
டிஜிபியின் மகன் நவீனா?
இந்த கேஸை விசாரிக்கும்போது தான் தெரிந்தது, ஏற்காடு இன்ஸ்பெக்டரின் முன்னாள் மனைவி தான் இந்த டிஜிபி என்றும், இறந்து போனது தன் மகனாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக செயல்பட்டதற்காக இது அவனுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை தான் என்றும் அவர் நினைத்திருக்கிறார். அதனால், தான் ஆதிரைக்கு ஆதரவாக நின்று அவளை குற்றமற்றவளாக நிரூபித்தாள்.
வருந்தும் பிரபு
பின், ஜெயிலில் இருந்து வந்த ஆதிரை, ரெசார்ட்டில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரை சமாதானம் செய்ய ஹார்ட் பலூனுடன் வரும் பிரபு, எல்லாருக்கும் சந்தோஷமா மட்டும் இருக்க ஹனிமூன் மெமரிஸ், நமக்கு இனிமே நியாபகமே வச்சிக்க கூடாத விஷயமா மாறிடிச்சுன்னு வருத்தப்படுகிறான்.
மேலும் படிக்க: உண்மையை கக்கிய நவீன் பிரண்ட்ஸ்.. மருமகள் சீரியல்
பாசமாக பேசும் ஆதிரை
அப்போது, அப்படி எதுவும் இல்ல. இந்த விஷயம் நடந்ததுனால தான் நீங்க என் மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கீங்கன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது என பாசமாக பேசுகிறாள். இதற்கிடையில், வேல்விழி அவளுடைய அப்பாவிடம் ஆதிரை ரிலீஸ் ஆன விஷயத்தை சொல்லி கோபப்படுகிறாள். இது குறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
டிஜிபியிடம் கத்தும் இன்ஸ்பெக்டர்
முன்னதாக, ஆதிரையிடம் வாக்குமூலம் வாங்க போலீஸ் காரர்கள் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆதிரை வழக்கு குறித்து விசாரிக்க, போலீஸ் டிஜிபி ஏற்காடு போலீஸ் ஸ்டேஷன் வருகிறாள். அப்போது, ஆதிரை நடந்ச அனைத்து விஷயங்களையும் கூறினாள். பின், போலிஸ் ஸ்டேஷன் வந்த இன்ஸ் பெக்டர், ஆதிரையை பற்றி தப்பாக பேசுகிறார். அத்துடன், மகனை இழந்த வலி என்ன என்பது எனக்கு மட்டும் தான் தெரியும் என்றும் கோபமாக பேசுகிறான்.
உண்மையை கக்கிய நண்பர்கள்
அப்போது, நான் ஏற்காடு வந்த உடனேயே நவீனின் ஃப்ரண்ட்ஸை விசாரித்தேன். அவங்க எல்லா உண்மையையும் கக்கிட்டாங்க எனக் கூறி இன்ஸ்பெக்டருக்கு அதிர்ச்சி தருகிறார். இதைக் கேட்ட ஆதிரைக்கும், பிரபுவிற்கும் சற்று நிம்மதியாக இருந்தாலும் ஆதிரை வெளியே வருவாளா என்பது குறித்து தெரியாமல் குழம்பி போய் நிற்கின்றனர்.

டாபிக்ஸ்