Marumagal serial: ஆதிரை கனவில் மண்.. பிரபு திருமண விஷயம் கைகூடுமா - மருமகள் சீரியலின் இன்றைய ப்ரோமோ
Marumagal serial: சிவபிரகாசத்தை பார்த்து பிரபுவிற்கு, ஆதிராயை பெண் கேட்க போகும் விஷயம் பற்றி வேல்விழி தாயிடம் சொல்கிறார். யாரிடம் தாய் போன் பேசுகிறார் என்பதை மறைந்து இருந்த படி பார்த்து கொண்டு இருக்கிறார், வேல்விழி.

Marumagal Serial: தமிழ் பார்வையாளர்கள் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர்களை அதிகம் பிரித்து பார்ப்பதில்லை. இரண்டிற்கும் அதே அளவு அன்பையும், பாராட்டுகளையும் பொழிகிறார்கள்.
தமிழ் தொலைக்காட்சித் துறையானது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பிராந்திய சேனல்களிலும் டிவி சோப்புகளுடன் வளர்ந்து வருகிறது. மதியம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை விட இரவில் ஒளிபரப்பபடும் சீரியல்களே இல்லத்தரசிகளை ஈர்க்கின்றன.
டி. ஆர். பியில் மாஸ்
அதே சமயம் ஃபிரைம் டைம் சீரியல்கள் அனைத்து தரப்பு மக்களையும் தங்கள் திரையில் கவர்ந்து. அதிக டி. ஆர். பியில் களுக்கு வழிவகுக்கும். அப்படி டி. ஆர். பியில் மாஸ் காட்டி வரும் புது சீரியல், மருமகள். தினமும் சன் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் மருமகள் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 2 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
சிவபிரகாசத்தை பார்த்து பிரபுவிற்கு, ஆதிராயை பெண் கேட்க போகும் விஷயம் பற்றி வேல்விழி தாயிடம் சொல்கிறார். யாரிடம் தாய் போன் பேசுகிறார் என்பதை மறைந்து இருந்த படி பார்த்து கொண்டு இருக்கிறார், வேல்விழி.
வாழ்ந்து காட்ட வேண்டும்
பாட்டியிடம், பிரபு பெண் பார்க்கட்டுமா என கேட்டதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அந்த வேல்விழி முன்பாக தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் பிரபு.
ஆதிரை தன் அப்பாவிற்கு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் அம்மாவிடம் கோரிக்கை வைக்கிறார்.
தாய்க்கு விருப்பம் இல்லை
நிலத்தில் பத்திரத்தை வங்கில் வைத்து அடமானம் வைக்க வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் தாய்க்கு இதில் விருப்பம் இல்லை. அதனால் தன் பெயரில் இருக்கும் நிலத்தை அடமானமாக வைக்க தான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
நிலத்தை அடமானம் வைத்து வாங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆதிரைக்கும், சிவபிரகாசத்திற்கும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆதிரை தன் அம்மாவை சமாதனம் செய்வாரா அல்லது வேறு ஏதேனும் வழியில் பணத்தை ஏற்பாடு செய்ய முயற்சி செய்வாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
நேற்றைய எபிசோட்
பிரபு, ” ஏகாம்பரத்தையும் அவரது குடும்பத்தையும் பெண் பார்க்க அழைத்து செல்லாலம் என சொல்லும் போதே வேண்டாம் என சொன்னேன். இந்த கல்யாணத்தை நிறுத்தியது, வேல்விழி தான் “ என்று கோபத்துடன் குடும்பம் முன்பு சொல்கிறார்.
மறுபக்கம் பிரபுவின், சித்தப்பா, “ வீடு புகுந்து ஒரு பெண் என் பொண்ணை அடித்துவிட்டு சென்றாள், அவளை நான் சும்மா விட மாட்டேன் “ என்றார். ஏற்கனவே தண்ணீர் கேன் போடும் நபருக்கு, ஆதிரைக்கும் பிரச்னை இருக்கும் நிலையில் அவளை என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று சித்தப்பா சொல்லிவிட்டார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்