மருமகள் சீரியல் மார்ச் 05 எபிசோட்: பட்ஜெட்டில் கை வைத்த ஆதிரை.. உண்மையை உடைத்த பிரபு.. சித்தர் ஏற்றிய பாரம்!
மருமகள் சீரியல் மார்ச் 05 எபிசோட்: ஆதிரை பிரபுவிடம் வீட்டிற்கு வெறும் 15000 மட்டும் கொடுத்து,இதற்குள் செலவை பார்த்துக் கொள் என்கிறீர்களே. அதற்கு என்ன காரணம் என்ன என்று கேட்டாள். - மருமகள் சீரியலில் இன்று!

மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், ஆதிரைக்கு போன் செய்த பிரபு, இப்போது நெஞ்சில் உள்ள பாரமெல்லாம் இறங்கி விட்டதா என்று கேட்டான். அப்போது ஆதிரை அது எங்கே இறங்கும். ஒரு சித்தர் இன்னொரு பாரத்தை என்னுடைய நெஞ்சில் ஏற்றி விட்டார் என்றாள்.
அதைத்தொடர்ந்து ஆதிரை பிரபுவிடம் வீட்டிற்கு வெறும் 15000 மட்டும் கொடுத்து,இதற்குள் செலவை பார்த்துக் கொள் என்கிறீர்களே. அதற்கு என்ன காரணம் என்ன என்று கேட்டாள். இதனைக்கேட்ட பிரபு அதற்கான காரணத்தை அவளிடம் கூறுகிறான்.’ இது தொடர்பான நிகழ்வுகள் மருமகள் சீரியலில் இடம் பெற்று இருக்கின்றன.
மருமகள் சீரியலில் நேற்றைய தினம் நடந்தது என்ன?
மருமகள் சீரியல் மார்ச் 05 எபிசோட்: மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடில், ஆதிரையும் பிரபுவும் சிவப்பிரகாசத்தின் வீட்டிற்கு வந்தனர். அப்போது ஆதிரையின் சித்தி, ஆதிரையை 10 லட்சத்தை திருப்பி தராமல், சிவப்பிரகாசத்திடம் பேசமாட்டேன் என்று சொன்ன சத்தியத்தை முன்னிறுத்தி, சண்டைக்கு நின்றாள்.
கெஞ்சிய சிவப்பிரகாசம்
சிவப்பிரகாசம் எவ்வளவோ கெஞ்சியும் அவள் கேட்ட பாடு இல்லை. ஆதிரையை நோக்கி நீ 10 லட்சத்தை எடுத்து வைத்துவிட்டு, உன் அப்பாவிடம் பேசு. அதுவரை இந்த வீட்டுப் படியை நீ மிதிக்கக்கூடாது என்றாள். இதைக் கேட்ட பிரபு மனசாட்சியோடு பேசுங்கள் என்று சொல்ல, அவனுக்கு பதிலடி கொடுத்த பிரபு, உங்களுக்கு 10 லட்சம் வேண்டுமென்ற பொழுது பத்திரத்தை குறி வைத்தீர்கள் என்பதை மறக்க வேண்டாம். நீங்கள் எல்லாம் பேசக்கூடாது என்றார்.
இதை எடுத்து ஆதிரை அங்கிருந்து கிளம்பலாம் என்றாள். இந்த நிலையில் இதில் கோபமான சிவப்பிரகாசம் மனைவியை அடிக்கப்போகும் பொழுது தவறி கீழே விழுந்தார். இந்த நிலையில் சிவப்பிரகாசத்தின் குழந்தைகளும், ஆதிரையும் அவரை அமைதியாக உட்கார வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்