மருமகள் சீரியல் மார்ச் 04 எபிசோட்: கொலைகாரி பட்டத்தால் சிதையும் ஆதிரை.. சின்னபின்னாமான சிவப்பிரகாசம்!
மருமகள் சீரியல் மார்ச் 04 எபிசோட்: ஆதிரை தன்னுடைய அப்பா வீட்டிற்கு பிரபுவுடன் சென்றாள். ஆனால், அங்கு காத்திருந்த சிவப்பிரகாசத்தின் மனைவி அவர்களை காயப்படுத்தி பேசினாள். - மருமகள் சீரியலில் இன்று!

மருமகள் சீரியல் மார்ச் 04 எபிசோட்: மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், ஆதிரை தன்னுடைய அப்பா வீட்டிற்கு பிரபுவுடன் சென்றாள். ஆனால், அங்கு காத்திருந்த சிவப்பிரகாசத்தின் மனைவி அவர்களை காயப்படுத்தி பேசினாள். இதனால், ஆதிரை அங்கிருந்து சென்றாள்’ இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்று இருக்கின்றன.
மருமகள் சீரியலின் நேற்றைய எபிசோடில், எல்லோரும் ஆதிரையை சமாதானம் செய்து சாப்பிட வைத்தார்கள். அவள் சாப்பிட, சாப்பாட்டில் கை வைத்த அந்த நொடியில், அங்கு தமிழரசியின் தூண்டுகோலில் கார்த்திக் வந்து நின்றான்.
ஆதிரையின் மீது திடீர் பாசம்
அவனைப் பார்த்த உடனேயே இவன் ஏதாவது பிரச்சினையை கிளப்புவான் என்று யூகித்த பிரபு, அவனை உடனடியாக வெளியே போகச் சொன்னான். ஆனால், கார்த்திக் செல்லவில்லை; மாறாக ஆதிரையின் மீது பாசம் இருப்பது போல பெரும் நடிப்பை வெளிப்படுத்தினார்.
ஒரு கட்டத்தில் ஆதிரை எழுந்து, நீ சாப்பிட்டாயா என்று கேட்க, அவன் சாப்பிடவில்லை என்று சொல்ல, நீ முதலில் அமர்ந்து சாப்பிடு என்று கூறினாள். இதனையடுத்து அவன் சாப்பிடும் பொழுது, ஏற்காட்டில் என்ன நடந்தது, எஸ் பி யின் மகனை கொன்று விட்டு கூட எப்படி உங்களை போலீசார் விட்டனர் என்று கேள்விகளாக கேட்டுக்கொண்டிருந்தான்.
டென்ஷனான பிரபு
இதைக் கேட்ட பிரபு டென்ஷனாகி உனக்கு அவ்வளவு தான் மரியாதை, சாப்பிட்டு இடத்தை காலி செய் என்றான். ஆனாலும், கேட்காத கார்த்திக் தொடர்ந்து சம்பவம் குறித்து கேட்டுக் கொண்டே இருந்தான்.
ஒரு கட்டத்தில் மிகவும் டென்ஷனான பிரபு, உனக்கு அவ்வளவு தான் மரியாதை என்ற ரீதியில் பேசினான் இதற்கிடையே பிரபு கார்த்திக் அம்மாவின் நகையை திருடியதை சொல்லிக்காட்டி குத்தி காண்பித்த நிலையில், கோபமான கார்த்திக் நான் ஒரு தவறு செய்தேன். அதனால் எனக்கு திருட்டு பட்டம் கட்டுகிறாய்.
அப்படியானால் ஆதிரையும் ஒரு தவறு செய்திருக்கிறார். அப்படியானால் அவர் கொலைகாரி தானே என்று சொல்ல பிரபுவுக்கும், கார்த்திக்கும் இடையே சண்டை மூண்டது. தில்லையும், வீட்டாரும் காத்திக்கிடம் எவ்வளவோ சொல்லியும்,அவன் கேட்ட பாடு இல்லை; ஒரு கட்டத்தில் தில்லை அவன் காலில் விழுந்து கெஞ்சிய நிலையில் நான் இனிமேல் இங்கே தான் இருப்பேன் கொலைகாரிக்கே இந்த வீட்டில் இடம் இருக்கும் பொழுது, எனக்கு ஏன் இடம் கிடையாது என்று பேசினான். அத்தோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்