Mari Selvaraj: ‘ஏய் மன்னா.. மாமன்னா..’ ரஜினியுடன் இணைந்து படம் செய்வது எப்போது? - மாரிசெல்வராஜ் பேட்டி!
Mari Selvaraj: இயக்குநர் மாரிசெல்வராஜ் ரஜினியுடன் தான் இணையும் படம் குறித்து பேசி இருக்கிறார். - மாரிசெல்வராஜ்

Mari Selvaraj: மாரி செல்வராஜ் தற்போது தன்னுடைய வாழை படத்தின் புரோமோஷனில் பிசியாக இருக்கிறார். இந்தப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்தப்படத்தின் பத்திரிகையாளர்களுக்கான காட்சி நேற்று சென்னையில் நடந்தது. இதனையடுத்து செய்தியாளர்களை மாரிசெல்வராஜ் சந்தித்தார்.
ரஜினியுடன் இணைவது எப்போது?
அப்போது அவரிடம் நீங்கள் ரஜினிகாந்துடன் இணைகிறீகளா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “ எனக்கு ரஜினிகாந்தை பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். எங்கள் இருவருக்குமே, நாங்கள் இணைந்து படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
என்னுடைய பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய திரைப்படங்களை பார்த்த பின்னர் அவர் என்னை அழைத்து உரையாடினார். இந்தத்திரைப்படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு இந்தப்படம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.