ரொம்ப அழுகாத தைரியமா இரு.. கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரஸ்ட் பண்ணும்னு தெரியாதா? மகனுக்கு மன்சூர் அலிகான் அட்வைஸ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரொம்ப அழுகாத தைரியமா இரு.. கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரஸ்ட் பண்ணும்னு தெரியாதா? மகனுக்கு மன்சூர் அலிகான் அட்வைஸ்!

ரொம்ப அழுகாத தைரியமா இரு.. கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரஸ்ட் பண்ணும்னு தெரியாதா? மகனுக்கு மன்சூர் அலிகான் அட்வைஸ்!

Divya Sekar HT Tamil
Dec 05, 2024 10:31 AM IST

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து போலீசாரின் வாகனத்தில் அமர்ந்திருந்த தனது மகனை சந்தித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது இணையத்தில் வைரல்.

ரொம்ப அழுகாத தைரியமா இரு.. கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரஸ்ட் பண்ணும்னு தெரியாதா? மகனுக்கு மன்சூர் அலிகான் அட்வைஸ்!
ரொம்ப அழுகாத தைரியமா இரு.. கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரஸ்ட் பண்ணும்னு தெரியாதா? மகனுக்கு மன்சூர் அலிகான் அட்வைஸ்!

கடந்த சில நாள்களுக்கு முன்னர் போதை பொருள் பயன்படுத்தியதாக சென்னை திருமங்கலம் போலீசார் 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். அவர்களிடம் ஓபியம், கஞ்சா, போதை மாத்திரைகள் உள்பட பல்வேறு போதை பொருள்கள் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாணவர்களிடம் நடத்திய விசாரணை

இதைத்தொடர்ந்து போலீசார் கைதான மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் , போதை பொருள் முழுவதையும் ரெட்டிட் என்ற செயலி மூலமாக வாங்கியதாகவும், பிறருக்கும் சப்ளை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த போதை பொருள் விற்பனையில் முக்கிய நபராக கருதப்பட்ட கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவரிடம் நடத்திய விசாரணையில் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடித்த திருமங்கலம் போலீஸ், ஒரு நாள் முழுவதும் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

போலீசார் விசாரணை

அப்போது துக்ளக், போதை பொருள் பயன்படுத்தியுள்ளாரா என்பது குறித்து அவரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு உறுதியான நிலையில், துக்ளக் உள்பட 4 பேர் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்ளக் யாரிடமெல்லாம் போதை பொருள்கள் வாங்கினார் என்பதை குறித்து விசாரித்தனர்.

கைதான அனைவரும் அம்பத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அனைவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து போலீசாரின் வாகனத்தில் அமர்ந்திருந்த தனது மகனை சந்தித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ரொம்ப அழுகாத தைரியமா இரு, ஏன் தப்பு பண்ற, கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரஸ்ட் பண்ணும்னு தெரியாதா? சாப்டிய என்று மகனிடம் அறிவுரை கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நிறைய புத்தகங்களை படி

இன்று அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகனை பார்க்க மன்சூர் அலிகான் வந்தார். அப்போது மகனிடம் ‘பிக்பாஸ் வீட்டிற்கு போவது போல நினைத்து சிறைச்சாலைக்கு சென்று வா. நிறைய புத்தகங்களை படி’ என அறிவுரை வழங்கியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் “தமிழகத்தில் போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது? இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

எனது மகனின் செல்போன் எண் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகள் செல்போனில் இருந்துள்ளது. அதை வைத்து கைது செய்துள்ளார்கள். போதைப்பொருளை ஒழிக்க நான் சரக்கு என்ற படம் எடுத்தேன். அந்த படத்தை வெளியிட தியேட்டர் கூட கிடைக்கவில்லை.  நேரம் வரும்போது பொங்குவேன்” என கூறியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.