‘எனக்கு பிடிச்ச வேலைய என் வாயாலயே வேணாம்னு சொல்ல வச்சிட்டாங்க.. கெளசிக் மாதிரி பல பேர்’ - மணிமேகலை பேச்சு
எனக்கு ஆங்கரிங் தொழில் எவ்வளவு பிடிக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு தொழிலை நானே என் வாயால் வேண்டாம் என்று சொல்லும் சூழ்நிலை வந்தது. - மணிமேகலை பேட்டி!

‘எனக்கு பிடிச்ச வேலைய என் வாயாலயே வேணாம்னு சொல்ல வச்சிட்டாங்க.. கெளசிக் மாதிரி பல பேர்’ - மணிமேகலை பேச்சு
தொகுப்பாளர் மணிமேகலைக்கு கலாட்டா நிறுவனம் அண்மையில் விருது வழங்கி கெளரவித்தது. அந்த மேடையில் அவர் விஜய் டிவியில் இருந்து விலகியதும் அதன் பின்னர் தான் சந்தித்த கஷ்டமான சம்பவங்கள் குறித்தும் எமோஷனலாக பேசினார்.
இது குறித்து அவர் பேசும் போது, ‘நான் இந்த சின்ன திரைக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் ஆகிவிட்டன. சின்னத்திரையில் ஒரு வாய்ப்பை எப்படியாவது அடித்துப் பிடித்து வந்துவிடலாம். ஆனால், சின்னத்திரைக்குள் வந்த பிறகு அதனை நீண்ட நாட்களுக்கு கைகொண்டு செல்லும் போது நாம் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
