Manickam Narayanan: ‘எல்லாரும் சிவகுமார் மாதிரி வாழமுடியாது.. ஐஸ்வர்யா மீது பசங்களுக்கு பெரிசா பாசம் இல்ல’ - மாணிக்கம்
Manickam Narayanan:ஆகையால், ஒரு குடும்பத்தில் இரண்டு பேருமே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். ஆனால் பெண்கள் கொஞ்சம் கூடுதலாக விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். இறைவன் இயல்பிலேயே பெண்களுக்கு விட்டுக்கொடுக்கும் குணத்தை அதிகமாக கொடுத்து இருக்கிறான்.- மாணிக்கம்

Manickam Narayanan: ‘எல்லாரும் சிவகுமார் மாதிரி வாழமுடியாது.. ஐஸ்வர்யா மீது பசங்களுக்கு பெரிசா பாசம் இல்ல’ - மாணிக்கம்
Manickam Narayanan: பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் அண்மையில் பிரிந்து வாழ்வதாக சொன்ன சைந்தவி - ஜிவி பிரகாஷ்குமார் குறித்தும், தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரம் குறித்தும் ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
பெண்கள் அனுசரித்து செல்ல வேண்டும்:
இது குறித்து அவர் பேசும் போது, “இன்று எல்லோரும் எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்களுக்கு பணம் வந்தவுடன் தலைகால் புரியாமல் சென்று விடுகிறது. என்னுடைய கருத்து என்னவென்றால், பெண்கள் தங்களுடைய சொந்தக்காலில் நிற்பதுதான் இங்கு நிறைய விவாகரத்துக்கள் நடப்பதற்கு காரணம் ஆகின்றன.