ஷாக் மேல் ஷாக் தந்த நடிகர் சூரி.. மாமன் பட விழாவில் வெளிவந்த முக்கிய தகவல்.. வாயடைத்து போன ரசிகர்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஷாக் மேல் ஷாக் தந்த நடிகர் சூரி.. மாமன் பட விழாவில் வெளிவந்த முக்கிய தகவல்.. வாயடைத்து போன ரசிகர்கள்..

ஷாக் மேல் ஷாக் தந்த நடிகர் சூரி.. மாமன் பட விழாவில் வெளிவந்த முக்கிய தகவல்.. வாயடைத்து போன ரசிகர்கள்..

Malavica Natarajan HT Tamil
Published May 08, 2025 05:00 AM IST

காமெடியன் வேடத்தில் இருந்து கதையின் நாயகனாக மாறி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூரி, தற்போது தான் நடிக்கும் மாமன் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஷாக் மேல் ஷாக் தந்த நடிகர் சூரி.. மாமன் பட விழாவில் வெளிவந்த முக்கிய தகவல்.. வாயடைத்து போன ரசிகர்கள்..
ஷாக் மேல் ஷாக் தந்த நடிகர் சூரி.. மாமன் பட விழாவில் வெளிவந்த முக்கிய தகவல்.. வாயடைத்து போன ரசிகர்கள்..

சூரியின் வளர்ச்சி

இதுவரை, சூரியை நாம் காமெடியனாகவே பார்த்து வந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் அந்த எண்ணத்தை மாற்றி விடுதலை படத்தில் அவரை கதையின் நாயகனாக அறிமுகம் செய்திருப்பார். இதையடுத்து அவர், கொட்டுக்காளி, கருடன் என சில ஆழமான படங்களில் நடித்து தன் திறமையை நிரூபித்திருப்பார்.

அப்படிப்பட்டவரிடமிருந்து மற்றொரு திறமையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். அது வேறொன்றும் இல்லை, மாமன் படத்தை இயக்கியது பிரசாந்த்தாக இருந்தாலும் அந்த படத்திற்கான கதையை கூறியது சூரி தானாம். இந்தப் படத்தில் உள்ள முக்கியமான சீன்கள் பல சூரியின் கதை தான் என்ற உண்மையை வெளிப்படையாக கூறியுள்ளார்.

சூரி அண்ணன் கதை

இதுகுறித்து இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், "கடவுளுக்கு நன்றி. இந்த விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. மாமன் படத்தை தாய் மாமன் என்ற உறவை வைத்து தான் தொடங்கினோம். ஆனால் இந்த படத்தில் அனைத்து உறவுகளும் இணைந்து இருக்கிறது. எல்லா குடும்பங்களிலும் நடைபெறும் விசயத்தை சூரி அண்ணன் கதையாக சொன்னார்.

அனைத்தும் சூரி சொன்னது

விலங்கு மாதிரி ஒரு திரில்லரை மீண்டும் இயக்கக் கூடாது என்று தீர்மானித்திருந்தேன். அந்த தருணத்தில் இது போன்றதொரு கதையைக் கேட்டதும் ரொம்ப நெருக்கமானதாக இருந்தது. சவால் மிக்கதாகவும் இருந்தது. அதன் பிறகு கதை எழுதத் தொடங்கினோம். இந்தப் படத்தில் உள்ள முக்கியமான விசயங்கள் அனைத்தும் சூரி சொன்னது தான். அதை நாங்கள் சரியாக செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.

பயத்தை அளிக்கிறது

ஒரு தோல்வி படம் கொடுத்தவுடன் என்னை ஆழ்கடலில் புதைத்திருந்தார்கள். அதன் பிறகு எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களின் உதவியுடன் விலங்கு என்ற ஒரு வெப்சீரிசை இயக்கினேன். அந்த வெப்சீரிஸை பாராட்டி என்னை உயர்த்தி விட்டவர்கள் ஊடகத்தினர். அதன் பிறகு எனக்கு வாய்ப்பும் வாழ்க்கையும் கிடைத்தது. இதனால் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் அனைவரும் நண்பர்களாக இணைந்து மாமனை உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகமாக சொல்கிறார்கள். அது எனக்கு பயத்தை அளிக்கிறது. மே 16ஆம் தேதி அன்று படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள். இந்தப் படத்தை என்னுடைய மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன்'' ‌என்றார்.

சந்தோஷமாக இருந்தது

தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசுகையில், '' இது எங்களுடைய குடும்ப விழா. சூரி எங்கள் குடும்பத்தில் ஒருவர். இந்த விழாவில் நானும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சூரி இந்த படத்தின் கதையை சொல்லும்போதும், பிரசாந்தின் இயக்கத்தை பற்றி சொல்லும் போதும் சந்தோஷமாக இருந்தது. அதனால் இயக்குநர் பிரசாந்திற்கும், தயாரிப்பாளர் குமாருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நெருங்கி பழகியவர்களுக்கு தெரியம்

சூரி அண்ணன் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். பத்து வருடமாக அவரை எனக்குத் தெரியும். காமெடியாக நடித்த பிறகு ஹீரோவாக நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். இது போல் இந்தியாவில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று தெரியவில்லை . இருந்தாலும் சினிமாவில் உள்ளவர்களுக்கு சூரியின் பயணம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

விடுதலை- கொட்டுக்காளி -கருடன் - என பல பரிமாணங்களை காட்டி தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தான் அவர் எவ்வளவு அப்பாவியாக இருந்தாலும் ..தெளிவாக யோசிப்பவர் என்பதும் தெரியும். அவரிடம் இருக்கும் கதை அறிவு சிறப்பானது.

சூரியின் முதல் கதை மாமன்

அவரிடமிருந்து வெளியாகும் முதல் கதை மாமன். இன்னும் அவரிடம் ஏராளமான கதைகள் இருக்கிறது. அதை எப்போதாவது ஒன்று இரண்டு என்று வெளியிட்டால் அவர் இன்னும் உயரம் அடையலாம். அதே நேரத்தில் மற்றவர்களின் கதையிலும் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் '' என்றார்.