ஷாக் மேல் ஷாக் தந்த நடிகர் சூரி.. மாமன் பட விழாவில் வெளிவந்த முக்கிய தகவல்.. வாயடைத்து போன ரசிகர்கள்..
காமெடியன் வேடத்தில் இருந்து கதையின் நாயகனாக மாறி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூரி, தற்போது தான் நடிக்கும் மாமன் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஷாக் மேல் ஷாக் தந்த நடிகர் சூரி.. மாமன் பட விழாவில் வெளிவந்த முக்கிய தகவல்.. வாயடைத்து போன ரசிகர்கள்..
சூரி, சுவாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன். குடும்ப உறவுகள் பற்றியும் தாய் மாமன் உறவின் அழுத்தத்தை பற்றியும் பேசும் படமாக இதனை இயக்குநர் பிரசாந்த் பான்டியராஜ் இயக்கியுள்ளார். இப்படம் வரும் 16 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் கதை பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சூரியின் வளர்ச்சி
இதுவரை, சூரியை நாம் காமெடியனாகவே பார்த்து வந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் அந்த எண்ணத்தை மாற்றி விடுதலை படத்தில் அவரை கதையின் நாயகனாக அறிமுகம் செய்திருப்பார். இதையடுத்து அவர், கொட்டுக்காளி, கருடன் என சில ஆழமான படங்களில் நடித்து தன் திறமையை நிரூபித்திருப்பார்.