Dileep Sankar : ஹோட்டல் அறையில் மலையாள நடிகர் மர்ம மரணம்.. திலீப் சங்கர் சடலமாக மீட்பு!
சீரியல்களில் பணியாற்றுவதைத் தவிர, ஷங்கர் பல படங்களிலும் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மரணம், மர்ம மரணமாக கருதப்படுவதால், அது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்: டிவி சீரியல்களில் நடித்து பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகர் திலீப் சங்கர் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 50 வயதான நடிகர் திலீப் சங்கர், டிசம்பர் 19 ஆம் தேதி ஒரு தொடர் படப்பிடிப்பு திட்டத்திற்காக நகரின் மையத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் அவர் செக் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவரை கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது அறைக்கு வெளியே ஹோட்டல் ஊழியர்கள் பார்த்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சீரியல் குழுவினரிடமிருந்து பலமுறை அழைப்புகள் எடுக்கப்படவில்லை, இதனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க தூண்டப்பட்டனர். அதன் பின், போலீசார் அங்கு வந்து அவரது அறை கதவை உடைத்தனர். உள்ளே அவர் சடலமாக இருந்தது தெரியவந்தது.
அறை உடைக்கப்பட்டு சடலம் மீட்டு
"அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் கதவை உடைத்தபோது, அவர் அசைவற்று கிடந்தார்" என்று உள்ளே சென்ற போலீசார் தெரிவித்தனர். இந்த மரணம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததாக நம்பப்படுகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மரணத்திற்கான காரணம் உள் இரத்தப்போக்கு, கீழே விழுந்த பின்னர் தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். நடிகர் கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் தீவிர ஆலோசனை
சீரியல்களில் பணியாற்றுவதைத் தவிர, ஷங்கர் பல படங்களிலும் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மரணம், மர்ம மரணமாக கருதப்படுவதால், அது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டர் மற்றும் அதை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், விசாரணை நடந்து வருகிறது.