வாயில் இருந்து ஒழுகிக் கொண்டு.. அந்த நடிகரால் அவ்வளவு தொந்தரவு- உண்மையை உடைத்த மலையாள நடிகை
போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நான் வேலை செய்ய மாட்டேன் என்று கூறியதற்கான காரணத்தை மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

வாயில் இருந்து ஒழுகிக் கொண்டு.. அந்த நடிகரால் அவ்வளவு தொந்தரவு- உண்மையை உடைத்த மலையாள நடிகை
2024 ஆம் ஆண்டில், மலையாள திரையுலகில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பல செய்திகள் வெளியாகின. இது பல நாட்களுக்கு இது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றன. இந்த சமயத்தில் தான், மலையாள நடிகை வின்சி அலோஷியஸ், போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் வேலை செய்ய மாட்டேன் என்று கூறி தற்போது பேசுபொருளைகியுள்ளார்.
நடிகை வின்சியின் அறிக்கை
நாளுக்கு நாள் இதுகுறித்த பேச்சுகள் அதிகமானதை அடுத்து தற்போது நடிகை வின்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். போதைப் பொருள் பயன்படுத்திய இணை நடிகர் அவரை தொந்தரவு செய்ததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
