Actor Booked Sexual Assault: கழிவறையில் வைத்து பாலியல் அத்துமீறல்.. மலையாள ஹீரோ மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு
Actor Booked For Sexual Assault: மலையாள சினிமா நடிகர்களான ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கழிவறையில் வைத்து பாலியல் அத்துமீறல் செய்ததாக கூறி நடிகர் ஜெயசூர்யா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா மற்றும் மணியன்பிள்ளை ராஜு ஆகியோர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து அவர்கள் மீது கேரளாவில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜூவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எர்ணாகுளத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் ஜெயசூர்யா மீது அதே பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை திருவனந்தபுரத்தில் உள்ள கன்டோன்மென்ட் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரபல மலையாள நடிகரும், ஆளும் சிபிஐ எம்எல்ஏவுமான முகேஷ் மீது, பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் மற்ற குற்றவாளிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
