66 years of Maalaiyitta Mangai:மனோரமா அறிமுகமான படம்..பாடல்களால் அதிரவைத்த கண்ணதாசன்..மறக்க முடியுமா? ‘மாலையிட்ட மங்கை’
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  66 Years Of Maalaiyitta Mangai:மனோரமா அறிமுகமான படம்..பாடல்களால் அதிரவைத்த கண்ணதாசன்..மறக்க முடியுமா? ‘மாலையிட்ட மங்கை’

66 years of Maalaiyitta Mangai:மனோரமா அறிமுகமான படம்..பாடல்களால் அதிரவைத்த கண்ணதாசன்..மறக்க முடியுமா? ‘மாலையிட்ட மங்கை’

Karthikeyan S HT Tamil
Published Jun 27, 2024 06:50 AM IST

66 years of Maalaiyitta Mangai: ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்து உலக சாதனை படைத்த ஆகச்சிறந்த நடிகை மனோரமா அறிமுகமானதும் இந்த திரைப்படம் தான்.

66 years of Maalaiyitta Mangai:மனோரமா அறிமுகமான படம்..பாடல்களால் அதிரவைத்த கண்ணதாசன்..மறக்க முடியுமா? ‘மாலையிட்ட மங்கை’
66 years of Maalaiyitta Mangai:மனோரமா அறிமுகமான படம்..பாடல்களால் அதிரவைத்த கண்ணதாசன்..மறக்க முடியுமா? ‘மாலையிட்ட மங்கை’

'மாலையிட்ட மங்கை'.

மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அந்த வகையில், சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட எத்தனையோ திரைப்படங்கள் தமிழ் சினிமாவை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்ற. அந்த வரிசையில் பல சிறப்புகளைத் தன்வசம் வைத்துள்ள திரைப்படம் தான் 'மாலையிட்ட மங்கை'.

ஆச்சி மனோரமா அறிமுகம்

சரத் சந்திர சட்டோபாத்யாயா என்ற ஆசிரியர் எழுதிய சந்திரநாத் என்ற நாவலைத் தழுவி இந்த 'மாலையிட்ட மங்கை' திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்து உலக சாதனை படைத்த ஆகச்சிறந்த நடிகை மனோரமா அறிமுகமானதும் இந்த திரைப்படம் தான். டி.ஆர்.மகாலிங்கம், பண்டரிபாய், மைனாவதி, பத்மினி பிரியதரிசினி, காகா ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதியோடு தானே தயாரிக்கவும் செய்திருந்தார் என்பது கூடுதல் சிறப்பு.

15 பாடல்களை அள்ளிக்கொடுத்த கவிஞர் கண்ணதாசன்

வாழ்க்கை தத்துவங்களை அள்ளி கொடுத்த கண்ணதாசன் கிட்டத்தட்ட இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பதினைந்து பாடல்களையும் அவரே எழுதினார். பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின. குறிப்பாக படத்தில் இடம் பெற்ற 'செந்தமிழ் தேன்மொழியாள்' என்ற பாடல் இன்றுவரை அழிக்க முடியாத இசை காவியமாய் விளங்கி வருகிறது.

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே என்று டி.ஆர் மகாலிங்கம், தனது சொந்த குரலில் பாடி ரசிகர்களை கிறங்கடித்திருப்பார். அனைத்துப் பாடல்களையும் தனது இசை உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தார்கள் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும் - ராமமூர்த்தியும். அதிலும் குறிப்பாக படத்தின் டைட்டிலில் இடம்பெற்ற 'எங்கள் திராவிட பொன் நாடே… திரைப்பாடல் திமுகவின் கொள்கை முழக்கப் பாடலாக பட்டி தொட்டி எங்கும் ஒலித்து சிறப்பான வரவேற்பைப் பெற்றது

66 ஆண்டுகள் நிறைவு

பல்வேறு கலைஞர்களை உருவாக்கிப் பல சிறப்புகளைத் தன்வசம் வைத்துள்ள இந்த திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் சென்று பார்த்ததாகப் பலர் கூறியுள்ளனர். தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக விளங்கக்கூடிய இந்த 'மாலையிட்ட மங்கை' திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஜூன் 27) 66 ஆண்டுகள் ஆகின்றன. ஆம், 1958 ஆம் ஆண்டு ஜூன் 27-ல் வெளியான 'மாலையிட்ட மங்கை' இன்று 66 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆண்டுகள் பல கடந்தாலும் நேற்று ரிலீஸானது போல் இருக்கும் இத்திரைப்படம் இன்றைக்கும் நம்முடன் உறவாடிக்கொண்டிருக்கிறது 'மாலையிட்ட மங்கை'.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.