‘மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை..’ சினிமா கலைஞர்களின் நாகரிகத்தை கேள்வி எழுப்பும் வைரமுத்து!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை..’ சினிமா கலைஞர்களின் நாகரிகத்தை கேள்வி எழுப்பும் வைரமுத்து!

‘மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை..’ சினிமா கலைஞர்களின் நாகரிகத்தை கேள்வி எழுப்பும் வைரமுத்து!

Malavica Natarajan HT Tamil
Published Jun 09, 2025 10:23 AM IST

தனது பாடல்களின் வரிகளை திரைப்பட பெயர்களாக வைக்கும் முன் தன்னிடம் மரியாதைக்காகவாவது ஒருமுறை கேட்டிருக்கலாம் என பாடலாசிரியர் வைரமுத்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

‘மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை..’ சினிமா கலைஞர்களின் நாகரிகத்தை கேள்வி எழுப்பும் வைரமுத்து!
‘மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை..’ சினிமா கலைஞர்களின் நாகரிகத்தை கேள்வி எழுப்பும் வைரமுத்து!

பாடல்களின் காப்புரிமை பிரச்சனை

இது குறித்து பேசுகையில், நடிகர் தியாகராஜன், இசையமைப்பாளர் தேவா போன்றோர் தங்களது பாட்டு மீண்டும் ஹிட் ஆனால் மகிழ்ச்சியே என கூறி வந்தாலும், இளையராஜா, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா போன்றோர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தப் பிரச்சனையே இன்னும் முடியாமல் இருக்க தற்போது புது பிரச்சனையை எடுத்து வந்துள்ளார் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து.

வைரமுத்துவின் கேள்வி

தமிழ் சினிமாவில், தனது பாட்டில் உள்ள பல்லவி வரிகளை பல இயக்குநர்கள் படத்தின் தலைப்பாக பயன்படுத்தி உள்ளனர். அதற்காக நான் யாரிடமும் ஒரு வார்த்தை கேட்டதில்லை. ஆனால், இதுதான் அவர்களின் நாகரிகமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு வார்த்தையும் கேட்டதில்லை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.

படங்களின் பட்டியல்

ஒன்றா இரண்டா... பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் பல…

நாகரிகம் ஆகாதா?

சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை. காணும் இடங்களில் கேட்டதுமில்லை. செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது

பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன். ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?" என காட்டமாக கேட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து

சமீப காலங்களில் வைரமுத்துவிற்கு எதிரான கருத்துகள் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அத்துடன், மணிரத்னம்- வைரமுத்து கூட்டணியும் சமீபத்தில் முறிந்ததை பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த கருத்துகள் வெளியாகி இருக்கலாம் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.