Lyricist Pa. Vijay: 'இப்போ எல்லாரும் பாட்டு எழுத வர்றாங்க.. அவங்களை எல்லாம்.. என் ஆசை இதுதான்'- பா.விஜய் ஓபன்அப்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lyricist Pa. Vijay: 'இப்போ எல்லாரும் பாட்டு எழுத வர்றாங்க.. அவங்களை எல்லாம்.. என் ஆசை இதுதான்'- பா.விஜய் ஓபன்அப்

Lyricist Pa. Vijay: 'இப்போ எல்லாரும் பாட்டு எழுத வர்றாங்க.. அவங்களை எல்லாம்.. என் ஆசை இதுதான்'- பா.விஜய் ஓபன்அப்

Malavica Natarajan HT Tamil
Published Apr 10, 2025 06:00 AM IST

Lyricist Pa. Vijay: தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டு கடந்து இன்று மாபெரும் ஜாம்பவானாக உள்ள பா.விஜய் தன் சினிமா அனுபவங்களை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Lyricist Pa. Vijay: 'இப்போ எல்லாரும் பாட்டு எழுத வர்றாங்க.. அவங்களை எல்லாம்.. என் ஆசை இதுதான்'- பா.விஜய் ஓபன்அப்
Lyricist Pa. Vijay: 'இப்போ எல்லாரும் பாட்டு எழுத வர்றாங்க.. அவங்களை எல்லாம்.. என் ஆசை இதுதான்'- பா.விஜய் ஓபன்அப்

எல்லாரும் பாட்டு எழுதுறாங்கே

அதில், "இப்போ சினிமாவுல நிறைய பேர் பாட்டு எழுதுறாங்க. நடிகர்கள் பாட்டு எழுதுறாங்க. இயக்குநர்கள் பாட்டு எழுதுறாங்க. எல்லாருக்கும் எழுத வரும். ஆனா, எல்லாராலையும் எல்லா பாட்டும் எழுதிட முடியாது. மொழி அறிவும் இசை அறிவும் இருந்து, இசைக்கு ஏத்த மாதிரி வார்த்தைய எப்படி பொருத்தனும்ன்னு தெரிஞ்சாலே நம்மால எழுத முடியும்.

பேசுனால எதிர்வினை வருது

ஒரு சிற்பி தான் சிலைய செதுக்க முடியும். நாம எதையாவது வரைஞ்சா அது சிலை ஆகாது. இன்னைக்கு இருக்க உலகம் ஃபேன்பேஸ்டு உலகமா மாறிடுச்சு. இப்போ நான் யாரப்பத்தியாவது ஒரு கருத்த முன்வச்சா, அவங்களோட ரசிகர்கள் தரப்புல இருந்து எதிர்வினை வர ஆரம்பிச்சிடுது. ஒரு கருத்துக்காக லட்சக்கணக்கான பேருக்கு எதிரானவனா நான் மாறிடுவேன். அதுனால இதபத்தி எல்லாம் பேச விரும்பல.

வாய்ப்பு அவ்வளவு எளிதா கிடைக்கல

முன்னாடி எல்லாம் பாடலாசிரியர் அப்படிங்குற பேர் அவ்வளவு எளிதா எல்லாம் கிடைக்கல. ஆனா, இப்போ அதெல்லாம் கிடைக்குது. 25 வருஷத்துக்கு முன்னாடி நான் சினிமாவுக்குள்ள வரும்போது, நான் ஒரு மியூசிக் டைரக்டர சந்திக்குறதே பெரிய போராட்டம். 6 மாசம் பிளான் பண்ணி, போராடி தான் ஏ.ஆர். ரஹ்மான்னு ஒருத்தர சந்திக்குறேன். மீட்ன்னா நான் தான் அவர பாக்குறேன். அவர் என்ன பாக்கல. இதுக்கே எனக்கு 6 மாசம் ஆச்சு. இளையராஜா சாரை எல்லாம் என்னால பாக்கவே முடியல. அவங்களை எல்லாம் சந்திச்சு வாய்ப்பு கேக்கவே முடியாது.

இன்னைக்கு எல்லாம் ஈஸி

அந்த டைம்ல் தான் எஸ்,.ஏ.ராஜ்குமார் சார் வராரு. சிற்பி வர்றாரு, தேவா சார் வர்றாங்க. இவங்களை எல்லாம் சந்திச்சு தான் சினிமாவுக்குள்ள வர்றேன். ஆனா, இதெல்லாம் இந்த காலத்துல தேவையே இல்ல. இன்னைக்கு எல்லாமே ஓபன் பிளாட்ஃபாரம் தான். இன்னுக்கு வாட்ஸ் அப்ல கூட வாய்ப்பு கேக்கலாம்.

கேள்வியே கேட்க மாட்டாங்க

நீங்க தான் டிசைட் பண்ற இடத்துல இருக்கீங்கன்னா. நீங்க எழுதுறது தான் பாட்டு. நான் அத படிச்சு பாத்துட்டு கவிதை, பாட்டு எல்லாம் அருமையா இருக்குன்னு பாராட்டி உங்களுக்கு கவிஞர்ன்னோ, பாடலாசிரியர்ன்னோ பேர் போடலாம். அத மறுக்க இங்க ஆள் கிடையாது.

உங்களுக்கு பெரிய பேன்ஸ் எல்லாம் இருக்காங்கன்னா, உங்கள யாருமே கேள்வி கேட்க மாட்டாங்க. உங்களுக்கு மொழி அறிவு இருக்கா? சந்த நயம் தெரியுமா? 5 வார்த்தைகளுக்கு அப்புறம் வார்த்தையை மாத்தி பாட்டு எழுத தெரியுமா? என கேள்வியே இருக்காது.

என் ஆசை இதுதான்

இப்போ நான் விக்ரமன் சாருக்கு பாட்டு எழுதுறேன் அப்படின்னா, என் கண்ணுல இருந்து ரத்தம் வரும். எனக்கு ஆசை என்னென்னா இப்போ இருக்க டைரக்டர்ஸ் எல்லோரையும் விக்ரமன் சார்கிட்ட பாட்டு எழுத விடணும்ங்குறது தான். அவ்ளோ கஷ்டம் அது. எழுதி எழுதி பேனா தேயாது எழுதுற ஆளோட கையே தேஞ்சிடும். அந்த அளவு அவர் வரிகளை பார்ப்பாரு.

ஹூக் வார்த்தை

இந்த காலத்துல ஒரு ட்ரெண்ட் இருக்கு அது ஹூக் வார்த்தை. பேமஸான வார்த்தை எல்லாம் போட்டு பாட்டு எழுதி மக்கள கவர் பண்றது. அது எல்லாம் அபந்த காலத்துலயே இருக்கு. சில பாட்டுக்கு தான் அதெல்லாம் தேவப்பட்டுச்சு. முக்காலா முக்காபல்லா, அலெக்க லைக்கா பாட்டு, இப்போ மதகஜராஜா படத்துல தும்பைக்கு தும்ப, டியர் லவ்வரு போன்ற வார்த்தைகள் எல்லாம் அப்படி பயன்படுத்தினது தான்.

பேப்பர கொடுத்தாலும் ட்யூன்

இது மியூசிக்குக்காக எல்லாம் போடல. அப்படியே அந்த சமயத்துல வந்துடுச்சு. பாட்டு எழுது கொடுத்த்ன். விஜய் ஆண்டனி படிச்சு பாத்துட்டு அப்படியே பாட ஆரம்பிச்சுட்டாரு. விஜய் ஆண்டனி, ஹிப்ஹாப் ஆதி கிட்ட எல்லாம் ஒரு மேஜிக் இருக்கு. அவங்க ரெண்டு பேர்கிட்டயும் தினத்தந்தி பேப்பர கொடுத்தா கூட ட்யூன் போடுவாங்க. அது பாட்டு இல்ல பேப்பருன்னு சொல்றதுக்குள்ள அது ட்யூனா மாறி நிக்கும்.