Lucifer sequel update: அடுத்த ஆண்டில் லூசிஃபர் இரண்டாம் பாகம் எம்புரான் ஷுட்டிங்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lucifer Sequel Update: அடுத்த ஆண்டில் லூசிஃபர் இரண்டாம் பாகம் எம்புரான் ஷுட்டிங்

Lucifer sequel update: அடுத்த ஆண்டில் லூசிஃபர் இரண்டாம் பாகம் எம்புரான் ஷுட்டிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Nov 08, 2022 05:52 PM IST

மலையாளத்தில் ஹிட்டடித்தி லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகும் எம்புரான் படம் குறித்த அப்டேட்டை வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தை விட பிரமாண்டமாக உருவாகும் இரண்டாம் பாகம் பல்வேறு நாடுகளில் நடைபெறும் கதையாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூசிஃபர் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் வெளியிட்ட படக்குழு. புகைப்படத்தில் இடமிருந்து வலம் படத்தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், நடிகர் மோகன்லால், படத்தின் இயக்குநர் ப்ருத்விராஜ், திரைக்கதை ஆசிரியர் முரளி கோபி
லூசிஃபர் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் வெளியிட்ட படக்குழு. புகைப்படத்தில் இடமிருந்து வலம் படத்தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், நடிகர் மோகன்லால், படத்தின் இயக்குநர் ப்ருத்விராஜ், திரைக்கதை ஆசிரியர் முரளி கோபி

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியான இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதில், லூசிஃபர் இரண்டாம் பாகம் எம்புரான் என்ற பெயரில் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக படத்தின் பணிகள் தொடங்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து எம்புரான் படம் குறித்த அப்டேட்டை படத்தின் இயக்குநர் ப்ருத்விராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, விரைவில் படத்தின் ஷுட்டிங் அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்க இருப்பதாகவும், முதல் பாகத்தை விட மிகப் பெரிய அளவில் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மோகன்லால், படத்தின் இயக்குநர் ப்ருத்விராஜ், திரைக்கதை ஆசிரியர் முரளி கோபி, தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் மற்றும் படம் தொடர்பாக பேசிக்கொள்ளும் விடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகரும், எம்புரான் படத்தின் இயக்குநருமான

"லூசிஃபர் படத்தின் கதை ஒரே படமாக உருவாக்கி விட முடியாது. முதல் பாகத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு இரண்டாம் பாகத்தை மேலும் சிறப்பாக உருவாக்க வேண்டும் என்ற உற்சாகத்தை அளித்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தை உருவாக்குவோம் என நம்புகிறோம்.

எம்புரான் படத்தின் கதை பல்வேறு நாடுகளில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. எனவே அதற்கு ஏற்ப படத்தின் ஷுட்டிங்கும் பல நாடுகளில் நடைபெறும்" என்றார்.

கேரளாவில் நிலையற்ற அரசியல் காரணமாக தனது தந்தை சார்ந்த கட்சியின் ஆட்சியையும், சகோதரி, சகோதரனை காப்பாற்றும் வேடத்தில் மோகன்லால் நடித்திருப்பார். உள்ளூர் தாதாவான அவர் க்ளைமாக்ஸில் பெரிய மாஃபிய என்ற ட்விஸ்டுடன் படம் முடியும் விதமாக அமைந்திருக்கும்.

இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், விவேக் ஓப்ராய், டோவினோ தாமஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதையடுத்து இரண்டாவது பாகத்திலும் அவர்களுடன் கூடுதலாக சில கதாபாத்திரங்கள் இடம்பெறும் என தெரிகிறது.