‘நான் தவறு செய்திருக்கலாம்… நான் அதிபுத்திசாலி கிடையாது’ -சஞ்சய் தத் கருத்துக்கு லோகேஷ் பதிலடி!
சமீபத்தில், சஞ்சய் தத் வெளிப்படையாக லோகேஷ் கனகராஜ் தன்னை லியோவில் வீணடித்ததற்காக அவர் மீது கோபமாக இருக்கிறார் என்று கூறினார். அதற்கு இயக்குனர் எப்படி பதிலளித்தார் என்பது இங்கே.

விஜய் நடித்த லியோ படத்தில் தன்னை லோகேஷ் கனகராஜ் சரிவர பயன்படுத்தாமல் வீணடித்து விட்டதாகவும், அதனால் லோகேஷ் மீது தனக்கு கோபம் இருப்பதாகவும், அந்தப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சய் தத் கூறியிருந்தார். இந்த நிலையில் அவரது பேச்சுக்கு லோகேஷ் கனகராஜ் பதில் கொடுத்திருக்கிறார்.
லோகேஷ் பேசியது என்ன?
டி.எச்.ஆர் இந்தியாவுக்கு லோகேஷ் அளித்த பேட்டியில், ‘அன்று சஞ்சய் தத் பேசிய உடனயே எனக்கு போன் செய்தார். அப்போது அவர் தான் வேடிக்கையாக பேசியதை மக்கள் திரித்து, வெட்டி ஒட்டி சமூகவலைதளங்களில் பதிவிட்டு விட்டனர். அதை பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது என்றார். அதற்கு நான் அதெல்லாம் ஒன்று பிரச்சினை இல்லை என்று கூறினேன்.
மேலும் பேசிய லோகேஷ், ‘ நான் அவர் கதாபாத்திரத்தில் தவறு செய்திருக்கலாம். தவறே செய்யாமல் இருக்க நான் தலைசிறந்த இயக்குநரோ அல்லது அதிபுத்திசாலியோ இல்லை. நான் எனது திரைப்படங்களில் நிறைய தவறுகளை செய்திருக்கிறேன். ஆனால் எல்லாமே எனக்கு பாடம்தான். சஞ்சய் தத்துடன் நான் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் வேலை பார்ப்பேன்’ என்று பேசினார்.
